பக்கம்:இராவண காவியம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பழிபுரி காண்டம் 1. உருக்குலை படலம் வேறு 1. அருட்கருத்தறி யாதவன் வெருக்கொ ளச்செவி மேயவர் மருக்கு முற்காம வல்லியை உருக்கு லைத்தமை யோர்குவாம். 2. செந்த மிழ்மொழிச் செல்வியும் சந்த மேய தடம்பொழில் விந்த நாடதை மென்புடை முந்தை யோரின் முறைசெய்தாள். 3. மைவ ளர்குழல் மங்கையின் ஐவ ளர்படை யாளனாம் மெய்வ ளர்மிடல் மேவிய கைவ லிகரன் காப்பினே, 4. மடங்க லன்ன மறவர்கள் இடந்தொ றுஞ்சென் றிருத்துமே அடங்க வீந்த வகந்தனை | உடங்க லின்றியே யோம்பினர், 5. தாயி னன்ன தமிழர்கள் தாயி னன்ன தமிழ்மகள் ஆயி னன்ன ரளிக்கவே சேயி னன் னர் சிறந்தனர். 8. புலைவி ழைந்து பொருந்திலாக் கொலைவி ழைந்த கொடியவர் அலைவி ழைந்திட அஞ்சியே நிலைவிழைந்து நிலவீனர், 3. ஐ-மேன் மை, தலைமை. மிடல் வலி, 4. மடங்கல்-சிங்கம், உடற்கல்-மீ தி. 8. நன் னர்-இன் ம்ை, நலம். 4. அலை-அலைத்தல், வகுத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/305&oldid=987808" இலிருந்து மீள்விக்கப்பட்டது