பக்கம்:இராவண காவியம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் ஆகும் படலம் 27. தந்தை சொல்லினைத் தட்டிகா டாண்டிட வந்த வேல்நம் வரன்முறை பொய்த்திடும்; மைந்த, ஏழிரண் டாண்டில் வருகுவன் சிந்தை தேறிநீ செல்க மறதென்றான். 28. சொற்ற சொல்லினைத் தட்டத் துணிகிலான் மற்றை யோரை வணங்கி மிதியடி பெற்றீ யாண்டுப் பெயர்தந் தயோத்தியைக் கொற்றத் தானைப் பரதன் குறுகினான், 29. அடைந்த பின்ன ரயோத்தியை விட்டவன் நடந்து போய்ச்சி று நந்தியூர் தங்கியே மிடைந்த மா முடி சூட்டி மிதியடிக் கிடைந்து நாட்டினை யாண்டங் கிருந்தனன்.' 50. மணிகு யின்று வருமுடி தாங்கியே தணிவி யன் றமை சத்துருக் கன்பெருந் துணையி னோடு பரதன் தொழுதிட அணிய யோத்தி யதைச்செருப் பாண்டதே. 11. தமிழகம் புகுப்டலம் 1. விடையி னோடு மிதியடி பெற்றுநாற் படையி னோடு பரத னகன்றபின்; அடையி னோடவண் வாழ்ந்திடு மாரியர் முடையி னோடு முகஞ்சுழித் தையுரீ இ. 2. தேடிக் கண்டு பிடித்த திருடரை ஓடிக் கண்டு வெருவுறு (ரர்போல், சூடிக் கொண்டவில் லாளியைச் சுட்டி wே. கூடிக் கொண்டு குசுகுசு வென் றனர், 3. அங்கு நின்று மகன்றிட வெண் ணிட தங்கி வாழும் முனிவர் தலைவனை இங்கு நீங்கள் வெருவுற லென் னென உங்க ளால்வெரு வுற்றன மென்னெனில். 29. மிடைந்த-நெருங்கிய, இடைந் து -வருந்தி, 1. அடை சிறப்பு. முட- வருத்தம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/297&oldid=987816" இலிருந்து மீள்விக்கப்பட்டது