பக்கம்:இராவண காவியம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13, எந்தை யெத்தனை தமிழரை யிரைகொ டுத்தனன் கழுகினுக் கந்த நாளினிற் றமிழகத் தரசு நின் றில வெதிரினில் முந்தை யுன் குலத் தாடகை முகமு குத்துயி ரிழந்ததை இந்த நாளிலே மறந்துநீ யெதிர்க்க வந்தது புதுமையே. 14. மன்னி வாழ்முனி வோர்தமை வருத்தி யோடெனத் துரத்திடும் உன் னை யன் றுன மன்னையு மொருங்கொ ழித்துயர் முனிவர்கள் இன்ன வின்றியே யென்றுமிங் கிருந்து வாழ்ந்திடச் செய்யவே என்னை யெந்தையிங் கேவினா ரென்ன வேதமிழ் மன்ன னும். 15. நனவி லன்றியே செந்தமிழ் நாட்டை வெல்லுவ மென்றுந் கனவு காணவும் விடுகிலேன் கழுகி னுக்கிரை யாக்குவேன் எனவெ குண்டொரு தடியினா லெறிய வேசிலை ராமனும் தனை மறித்துமோ ரம்பினாற் றலைய றுத்தன னை யகோ, 16, நின்ற வாரிய முனிவர்கள் நீடு வாழ்கென வாழ்த்தியே அன் றி யாமிதற் காகவே யாங்கு கூடின மன்றியும் சென்று கரனை ய ணுகவே செய்து வைத்தது மாகுமால் முன்றி யாங்கள் நினைத்தது முடிந்த தென்று முழங்கினர். 17. கொன்ற மூத்தவன் சென்றுமே குறுகி னானிலைக் குடிசிலைச்; சென்றெ டுத்துமே மறவர்கள் திகைதி கைத்தழு திரங்கியே குன்ற ழித்தவன் றோளனைக் குழிவி டுத்துமே நிகழ்வினைச் சென்று ரைத்திட விறையிடஞ் சிலரை யேவினர் செருகரே. 14. உன-உன்னுடைய, மன்- அரசன். 16. ஆங்கு-சாபங்கள் குடிசையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/320&oldid=987823" இலிருந்து மீள்விக்கப்பட்டது