பக்கம்:இராவண காவியம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. உமிழ்குருதி யோடவெ னுடன்பிறவி தன்னைக் குமிழினொடு வள்ளைமுகை கொய்தகொடி யோரை இமிழ்கமுகு நாய்நரிகட் கீகைபுரி யேனேல், தமிழ்மொழி கலாதசிறு தாயகனு மாவேன், 40. 'தனித்தமிழ் மறப்படை தனைத்தமிழ் நிலத்தார்க் கனைப்படு படைத்தலைவ னைக்கொல்கொடி யோரை நுனைப்படுசெவ் வேலினுயிர் நூறியொழி யேனேல், இனத்தவர் தமைப்பழி யிரண்டகனு மாவேன். பொருவிலியை யிளை யளொடு போர்மறவர் தம்மை அருமையுயிர் கொன்றவட வாரியரை நாளை நரிகழுகி னோடுவெறி நாய்க்குதவி டேனே ல் ஒருதொழிலு மின் றியிரந் துண்பவனு மாவேன், மறவர்க ளிலாது தனி வந்தவிளை யாளை அறமல புரிந்தவட வாரியரை நாளை திறமிகுசெவ் வேலினுயிர் தீர்க்கிலனே யாகிற், பிறர்பொருள்கொ டுண்டுவளர் பேதையனு மாவேன். 48, அறமல புரிந்தவட வாரியரை நாளை மறவர் மனை யோர் மகிழ வைத்துவதை யேனேல், குறளையொடு பொறுமையல் கொண்டவரி னொன்றோ பிறர்பழி யெடுத்துரைசெய் பீடிலனு மாவேன. வேறு 44. இன் னன பலவா றாக வினைந்துவஞ் சினங்கள் கூறி மன்னவர் மன்னன் பின்னர் மதிவலி யமைச்ச ரெங்கள் கன் னவில் குவவுத் தோளாய்! கழிந்ததற் கிரங்கே லென்ன என் னினிச் செய்வே னென்ன வியல்வது தெரிந்த வன்னார். 45. மறப்படை தம்மா என் னான் மனைவியைக் கவர்ந்து வந்து புறப்பொருட் படியே காவல் புகுத்திநா மோம்பி னந்த அறக்கொடும் பாவி யீங்கே யடைகுவ; னடையா ஆ னாயின் துறக்குவன் றமிழ கத்தைத் துன்னிடத் துணியான் பின்ன ர், 39, உமிழ்தல் ஒழுகுதல், இமிழ்-ஒலி. 4!, நுனை முனை, நூறி-கொன் று. 48, பொ று மையல-பொறாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/328&oldid=987845" இலிருந்து மீள்விக்கப்பட்டது