பக்கம்:இராவண காவியம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 44. 41. தம்பி இவ்வழி நடந்து செல்லினே பம்பையங் கரையினைப் பார்ப்பை, அங்கதிர்ப் பென்மதி லாதமா னினமும் புட்களும் ' தின்பதற் கினியநெய்த் திரளை போலுமால். 42. கவர்புன லேரியின் கரையின் மேல்புறம் சவரியென் றொருமகள் தவஞ்செய் கின் றனள்; அவரு மறைவில் நம் மவர்கள் வாழ்வுறு கவினிய பலகுடில் காண்பை யென்றனன். 43, விடைகொடு செலவினை மேவிப் போய்மரைக் கடிமலர்ப் பம்பையங் கரையைக் கண்ணுறீஇ வடிமையாற் றமிழரை மயக்கி யாரியர்க் கடிமைகொள் சவரியின் குடிலை யண்மினார். அன்னரை யின்னரென் றறிந்த அன் ன ளும் மன்னவர் வருகென வணங்கி; மற்றவர்க் கின்னுண வூட்டியாங் கிருந்து சென்றுமே தன்னர்வாழ் மறைவிடந் தன்னைக் காட்டினாள். 45. சிற்றிடைச் சவரிமுன் செல்லச் சென்றுமே கற்றவர் தந்நிலை நண்ணி யன்னர்பால் உற்றதை யுரைசெய வுள்ளங் கன்றியே எற்றவன் கொடுஞ்செய லென்ன எ வதுமே. 48. மறையவ ரெனத்தக மறைவில் வாழ்குநர் இறைமக! கிட்கிந்தை இளையன் நண்/ பொடு நிறைதவ வேள்வியில் நிகரி லாரென அறைதரு மதங்களின் அடிமை யாயினான் , மற்றவன் அண்ணனாம் வாலி வாழ்வறின் பெற்றனை சீதையைப் பெரிய தானை யான்; நற்றமி ழரசனை நலித லெண் மையாம்; அற்றையே நாமும் வாழ் வடைந்த நாளென. 41. அதிர்ப்பு-நடுக்கம். நெய்த் திரள் -வெண்ணெய்க்கட்டி, 4?, இவர் தல் குடித்தல், 3. வடிமை-கட்டழகு. 47. சலிதல்-வெல்லுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/345&oldid=987859" இலிருந்து மீள்விக்கப்பட்டது