பக்கம்:இராவண காவியம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 இரான காவியம் 16. இன்னணம் பலவா றாக இயல்வதை யறிகி"லாது முன் னது பின்ன தாக முரண்படத் தனிய ளாகச் சொன்னதைக் கிள்ளை போலச் சுழல்படப் பிரிவாற் பின்னரும் சொல்லிச் சொல்லிப் பித்திபோல் பிதற்றி னாளே. 17. வாடிய முகமும்; எண்ணி வறண்டதோ ருளமும்; தீரா நீடிய துயருந் தாங்கி நெடுங்கணீர் உதிர்க்குங் காலைப் பீடணன் என்னப் பெற்றோர் பெருமையா யிட்ட பேரான் தேடிய செல்வ மான திரிசடை யாங்கு வந்தாள். 18. வந்தவள் அம்மா! நீயும் வருந்துதற் குனக்கீங் கென்ன வந்தது? துயரேல்; உன்றன் மன்னவன் செயலெ தேனும் வந்ததோ செவிக்கு? மேனி வாட்டுமே தேனு மோர்நோய் வந்ததோ? இன்ன தென்று வகுத்துரைத் திடுவா யென்றே. 19, கண்ணை மலரைப் பூத்த காந்தள்மென் மலரா லுள்ளத் துண்ணினைந் துதிரு முத்த வொழுக்கறத் துடைத்து; நல்யாழ்ப் பண்ணினைந் தயரப் பேசும் பழந்தமிழ்ச் சொல்லால் அம்மா ! எண்ணின வெண்ணந் தன்னை யியம்புதி யொழியா தென்றாள். 20. அன்றியும் எங்கள் தந்தை யாகிய இலங்கை வேந்தன் அன்றுன துளஞ்செம் மாக்க அருளிய உறுதிச் " சொல்லைப் பொன் றினுந் தவற மாட்டார்; பூவையே துயரை விட்டு நன்றுன துளக்கோள் தன்னை நவிலென நவிலல லுற்றாள். 21. என் றன தழிவைப் போக்கி யென துவாழ் வுனது வாழ்வாய் ஒன் றிய படிகொண் டோவா து தவுமென் னுரிமைத் தோழீ! உன் றன இதவி யேயென் னுயரின தருங்காப் பாகும் அன்றிவே றில்லை யென்ப தறைதலும் வேண்டும் • மோதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/362&oldid=987872" இலிருந்து மீள்விக்கப்பட்டது