பக்கம்:இராவண காவியம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவம் படம் 23. அடலனுமா! எனக்குன்னா லாவதொரு செயலுண்டு கடலுலகில் பிறந்தவர்கள் காண்பதுயர் வாழ்வல்லான் அடிமையினை விரும்புபவர் அகலிட த்தி லுளரோகாண்? கொடுமையினு மிகுகொடுமை குடிப்பெருமை யிலதன்றோ ? 24. இளமையிலே பெற்றோரை யிழந்துவிட்டேன் என் செய்கேன்; வளமையிலே மிகுந்த தமிழ் மாமன்னர் குடிப்பிறந்தும் கள மதிலே பொலிதூ ற்று பதர்போலக் கடைப்பட்டேன் உளமதிலே யுளதொன்றை யுரைக்கின்றே னுன்னிடத்தில். 25. முன் வந்து பிறந்தவன் பொன் முடிசூடி யரசாளப் பின் வந்து பிறந்ததனால் பிழையென்ன செய்தேன் மன்? மின் வந்த முடிசூடி மிக்கோடின் அரசேபோல் மன்வந்து தொழுமரச வாழ்வடைய மனக்கொண்டேன். 26. ஆதலினால் உன் வரவென் ஆங்கால மேபோலும்! சீதையைமீட். பதற்கென் னால் ஆவதெலாம் செய்கின்றேன்; ஓதியிதை ராமனிடம் உன்னிறைபோ கென் றனையும் மாதமிழர் பேரரசாய் வாழ்விப்ப துன் கடனே. 27. ஊட்டு தமிழ் வாயனும் உள்ளபடி சொல்லுகிறேன் நாட்டரச ராய்நீங்கள் நாடாளும் செய்தியினை ச். கேட்ட.முத லென்னகத்தே கிளை ததெழுந்த வெண் ணமின்று கூட்டினது நம்மையொன்று குறையில்லே னெனவனுமன். 28. தென்னிலங்கைப் பேரரசே! சீதைமண வாளனுனை மன்னவனாய்த் தான் வாழ வைத்திடுவான் தப்பாமல்; அன்னவனுங் கார்கால மகன்றவுடன் இங்குறுவான் சொன்னபடி நீயவனைத் துணையாகக் கொள்வாயே, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/375&oldid=987889" இலிருந்து மீள்விக்கப்பட்டது