பக்கம்:இராவண காவியம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974 இராவண காரியம் 15. மூதறி வாட்டியோடு மொய்குழல் தன்னைக் கொன்ற ஓதுதற் கரிய பாவி உருவுகாண் டலுந்தீ தாகும்; தலா லவனைப் போக்கி அவன்மனை யாட்டி தன்னைப் பாதுகாத் திடல்நன் றென்னப் பகர்ந்தனள் ஒருமு தாட்டி. 16. ஆமிது தகுதி யென்றார் ஆங்குள மகடூஉ; ஆடூஉ நாமினிப் பார்ப்ப தென்னே நற்றமிழ்க் குரிய கோவே! தாமரை யோடு தும்பை தாதுமே பகையை நாறி ஏமுறு வாகை சூட லேயினிச் செய்வ தாகும். 17, அருந்தமி ழகத்தி லின்றோ டாரிய மெனுமுட், பூண்டு மருந்துக்குங் காண லின் றி வகைபட வொழிக்க வேண்டும்; இருந்தமுள் மரத்தை வேரோ டிளமையே களையா னாயின் திருந்தவே முதிரின் மற்றோன் செங்கையை வருத்து மன்றோ ? 18. நெஞ்சினி லச்ச மின்றி நின்மதி லிலங்கை வந்த வஞ்சவா ரியப்பே ரீங்கு வழக்கின்றி யொழிக்க க வேண்டும்; நஞ்சர வதனைப் பாவம் நல்லதென் றில்லில் வைத்துக் கஞ்சியும் வார்த்துப் போற்றுங் கயமைபோற் பிறிதொன் றுண்டோ ? 19, காரின மிருந்து வாழுங் கடிமதி லிலங்கை வந்த ஆரியப் பூண்டீங் கின்றி யடியுட னொழிக்க வேண்டும்; ஓரிலிற் பிடித்த தீயை யொருங்குபோந் தவியா ராயின் ஊள ரையே தின் மார் மக்கட் கொக்கின் பி யொழிக்கு மன்றோ ? 20. வளைபயில் டெங்கு சூழ்ந்த மதிலணி யிலங்கை வந்த துளையரீங் க றவின் றோடு நூறியே தொலைக்க வேண்டும்; களையினை முளையி லேயே களைந்தெறி யாது விட்டு விளைவடை யாது சோம்பும் வீணரு முலகி லுண்டோ ? 16. தாமரை - அடையாளப்பு. தும்பை - போர்ப்பூ. ஏமுறல்-மகிழ்தல். வாகை-வெற்றிப்பூ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/400&oldid=987894" இலிருந்து மீள்விக்கப்பட்டது