பக்கம்:இராவண காவியம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடி 31. 29. திண்டிஹ வீர்நறுந் தேனங் தூமொழி ஒண்டொடி சினை சிதைத் தொழித்த பாவியைத் துண்டுசெய் தீர்ங்குழல் தொட்ட கையினைக் கொண்டுவந் தெமக்குநீர் கொடுக்கு வீரென்பார். 30. கயிறதாத் திரித்துமான் கன்றைக் கட்டிடச் செயிரறு செம்பொனிற் செய்த பாவையின் உயிரினைச் சினை சிதைத் தொழித்த பாவியின் மயிரினை யறுத்துமே வாரு மென்பரால். பாட்டியைக் கொன்றுபெண் பழிகொள் பாவியைச் சாட்டையா லெங்கள்கை சலிக்கச் சாடியே வாட்டடங் கண்ணொடு வடக்க ணோட்டிடக் கூட்டி.னி லடைத்துமே கொணரு மென்பரால். 32. நன்னலஞ் செறி தமிழ் நங்கை மாரொடு பன்னலஞ் செறிந்தபொற் பாவை கைசெயத் துன்னலர் முடிமணி தொகுத்துக் கொண்டுவந் தின்னலம் புரிதிரென் றியம்பு வார் சிலர், 33, கலம்படு முறுப்பினைக் களைந்து நந்தமிழ்க் குலம்படு நங்கையைக் கொன்ற வன் மனை புலம்பிட மாமுடிப் பொன்கொ ணர்ந்து செஞ் சிலம்புசெய் தணிகுவந் தெளிமி னென்பரால். 34. அரிக்குகை தனை யடுத் தளவி லாக்குறு நரிக்குலஞ் சூழ்ந்தபோல் நமதி லங்கையைப் பொருக்கெனச் சூழ்ந்தவப் புல்லர் தங்கக் முருக்குவ மிமையென முரணி யார்க்குவர். 35. காழ்த்திற மறவர்கள் களித்துக் கண்கொளப் பாழ்த்திற வாரியப் படை யை மண்கொள் வீழ்த்தியே யின்னை யே வெற்றி கொண்மென வாழ்த்தியே படைக்கலம் வழங்கு வாரரோ. 30. செயிர் - குற்றம். 31. வசள் தடம் கண் - சீதை . 82, கை செய்தல் - அலங்காரஞ் செய்தல். 98. கலம் படும் - அணிகலன் அணியும், 86. காழ் உ று தி. கண்கொ ளல்-கடுஞ்சின ங் கெர்ளல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/425&oldid=987929" இலிருந்து மீள்விக்கப்பட்டது