பக்கம்:இராவண காவியம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்போர்டு பயலர் 54. புகல டைந்தவப் பல்லர்கள் தம்மொடு தொகைய டைந்த துணைவலி யாரியர் நகர டைந்தனர் முற்றினர் ஞாயிறைப் பகைய டைந்த பனித்தொகை போலவே. 55. கோயில் போலுங் கொடுமுடி வானுயர் வாயில் நாலு மருவு மதிற்புற வேயில் போலு மிளைப்புறம் போந்துபுற் நீயல் போலு மிடையற மொய்த்தனர், 7. முதற்போர்ப் படலம் 1. முருகு வாழ்ககர் முற்றுகை கண்டனம்; மருத மார்ப்ப மணந்தவ ரின் னுயிர் தருது மென் றழத் தண்ணம் படுகளம் பொருது வீழ்முதற் போரினைக் காணுவாம். (மிளை யிடைப் போர்) 2. முண்டி வந்து முழைகொள் களிற்றினங் கண்டு டன் றெழு கண் டீ ரவமெனக் கண்ட துந்தது கண்மற வர்சினங் கொண்டெ முந்தருங் கொண்ட லி னார்த்தனர். காத்து நின்ற கடுஞ்சின வீரர்கள் வேர்த்தெ முந்தொளி வேலினும் வாளினும் போர்த்து மற்றவர் பூத வுடம்பினை ஆர்த்து நின்றன ராரிய ரச்சுற. 4. நன்றி யின் றயல் நாட்டிடை வந்ததும் மன்ற லாங்குழல் வன் கொலை செய்ததும் ஒன்ற வின்றெம தூ ரினை முற்றலும் கொன்று ணுந்தொழி லீருங்கள் கொள்கையோ? 65, வேய் இல்-மூங்கில் புகர்.. 1. முருகு- அழகு, மருதம்-மணப்பறை. தண்ண ம்-சாப் ப . ம. 9, முழை-குகை, கண்டீரவும். சிங்கம், கொண்டல் கமுகில். 3. வேர்த்து சினந்து. பூதவுடல்-பருவுடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/439&oldid=987945" இலிருந்து மீள்விக்கப்பட்டது