பக்கம்:இராவண காவியம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. சென்றி தோவருந் தீய வடவரை ஒன்றி லாம லொருங்கு களப்படக் கொன்று வாகை புனைந்து குடைநிழல் நன்று கூடுவ மென்ன நவையிலான். 48. வளப்ப டக்கதிர் வானுயர் மும்மதில் உளப்ப டாம் லுரனொடு காப்பதோ டளப்ப டை, த்தொகை யாரியர் தம்மையோர் களப்ப டுத்திப் பொருத்திகல் காணுவீர். 44. உளவ ரோடவ ருற்றன ராகையால் இளய ரென்றுகொண் டெள்ளுதல் தீமையாம்; வளமை கொண்ட மறப்படை யுள்ளரும் களமி லாதிகல் காணுதல் கூடுமோ? 45. என்ன வேயிறை யோதவவ் வேறனார் மன்ன வாவட்ட வாரிய வஞ்சகர் இன்னி தோசென் றிகலி யிலங்கையைத் துன்னி டாது துறப்பமென் றேகினார். 48. ஏகி மற்றவ ரீரிரு வாயிலும் ஆக முற்று மருங்கடி யார்வுறப் பாகு செய்து பழந்தமிழ் மள்ளரை வாகை சூட வுழிஞை மலைந்தனர். ஊர ணங்கி னுயர்குடி மள்ளர்கள் தோரணங்கள் தொறுந்தொறுந் துன்னலர் பேர ணங்கிப் பிணங்கள் பிறங்கிட ஏர ணங்கெட வேமங்கொண் டார்த்தனர். 43. வளம்-வலியும், பல்பொருளும், பொறியும். கருவி யும். உளப்படாமல், உட்புகாமல். அளம-மிகு தி. 44, இளயர்-வலியற்றவர். 46. கடி-காவல். மலை தல்-சூடு தல். 47, அணங்கு -பெண், தோரணம்-மதில்வாயில். அணங் குதல்-கெடுதல். பிறங்க - குவிய. ஏரணம் கெட-கணக்கின் றி. ரமம் - காவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/437&oldid=987947" இலிருந்து மீள்விக்கப்பட்டது