பக்கம்:இராவண காவியம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம்போர்ப் படலம் 22, முன்னவன் றன்னை வீழ்த்தி முறையுட னரசு பெற்ற பின்னவா! வென்னால் நீயும் பேரஞ நற்றாய் பாவம் உன்னருஞ் சேனை குழ வுனதுநா டடைந்து நீயும் இன்னலந் துய்ப்பா பென்ன விளைந்துவில் லவனுக் கூற' 23. உள்ளம் துடையே யை உறுதியாய் நாளை வென்றி கொள்ளுவம்; நானே யந்தக் குறியனைக் கொல்லே அ னென் றாய் வள்ள லுக் தேற்றத் தேறி வடவனும் பள்ளி புக்கான்; புள்ளின மொலிப்ப வானம் புலர்ந்தது புலரி காண்பான். 9. இரண்டாம் போர்ப் படலம் 1. இருண்டபே ரிருளை நீக்கி களங்கதிர்ச் செல்வன் றுப்பிற் றிரண்டுமே பொருது வென்று சென்றவர் போக மண்ணில் புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ டி.ரண்டுநா ளாயிற் றென்ன வெண்ணுவான் போல வந்தான். 2. கதிரவன் றோன்றா முன் ன ங் கடுந்திறல் மறவ வெள்ளம் கதுமென வெழுந்து போந்து களத்திடைடப் பரந்த தாங்கே அதிர்குரல் முரசஞ் சங்க மருந்துடி பதலை காளம் முதிர்கிணை முழவ மற்றும் முகிலென முழங்கிற் றம்மா ! 3. முந்தைநாள் முழுது மாவல் முடிகுற மிதக்க வுண்டு சந்தைபோ லொருவிச் சென்று சலிப்பினை யிரவுக் கீந்து குந்துகால் விலங்கும் உள்ளுங் கூடியே கிளையி னோடு வந்து வாய் திறந்து போரின் வருகைபார்த் திருந்த மாதோ. 28, குறியன் - சேயோன்.வள்ளல்-சுக்கிரீவன், புலரி. ஞாயிறு. புலரி காண வானம் புலர்ந்தது. 2, பதலை- துடுமம், கச்ளம் கொம்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/455&oldid=987959" இலிருந்து மீள்விக்கப்பட்டது