பக்கம்:இராவண காவியம்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 18. மீளு வேனிதோ வென்றுதுப் பாதெனச் சூரு ரைத்துச் சுருக்கெனச் சென்றனை ஆனி லாதொ ரயுலவு பின்னால் மாள வோவுனை வாழ்த்தி யனுப்பினேன். 19. தங்க மேசெந் தமிழ்பயில் வாயொடு பொங்கு நீர்மை பொழியும் புனைமலர்த் திங்கள் மாமுகஞ் சேர்தரு சென்னியைச் செங்க ளத்திடைத் தேடியான் காண்பனோ? 20. நீறு பூத்த நெருப்பன வஞ்சரைக் கூறு பாத்துக் கொடுத்துச் கழுகுண வீறு பூத்தசெவ் வேற்கையை வெம்படைக் காறு பேர்த்த களத்திடைக் காண்பனோ? இன்ன கூறி யிராவண னேங்கிட அன்ன காலை யருந்தமிழ் மள்ளர்கள் துன் னி னாரிளந் தோன்றலோ டாயிடை மன்ன னாவென வாரி யெடுத்தனன். 22. ஏந்த மார்பி விறுகத் தழுவினன் வேந்தர் வேந்தனு மெய்மறந் தையன்மேற் சாய்ந்து தானெனுந் தன்மை யொழிந்தனன்; போந்தி யாவரும் பூசல் மயங்கினர். 28. எயிறொ லிப்ப ரிளமதி முத்துவர் வயிற லைக்குவர் மாரடித் துந்துவர் மயிர வீழ்க்குவர் வாயடித் தேங்குவர் உயிர டக்குவ ரோவென் அலறுவர், 24. ஏங்கு வார்விமு வாரெழுந் தேர்தலைத் தாங்கு வார்செழுந் தாமரைக் கைகள் எல் ஓங்கி யோங்கி யறைந்தறைக் தொண்மதி வீங்கு வாரழு வாருளம் வெம்புவார். 19, நீர்மை - அருள், மலர்-கண். 20. பாத்து-பகுத்து. வீறு வெற்றி. காது கொழு. 32, ஏந்து அம் மார்பு. ஏக் து டயர்க் த. பூசல்மயங்கின ர். மாய்த்த மகனைச் சூழ்ந்து பேரொலியிட் டழுதனர். 99. எயிறு-பல். உந்துதல் -மேல் விழுந்து முன் செல்த ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/475&oldid=987970" இலிருந்து மீள்விக்கப்பட்டது