பக்கம்:இராவண காவியம்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. 40, வாட்டடங் கைகளால் வாரி யெடுத்தணை த்தே ஓட்டை மனமுருக வோவென்று கூப்பிடக் கேட்டங்கு கூடிக் கிளையெல்லாங் கோவென்று போட்டெங்கள் வாயிடைமண் போனாயோ வென்றழுதார். 41. தானைத் தலைவர் தலைவன் றனை த்தேற்றித் தேனைப் பழித்த தமிழ்ச் செல்வனுடல் நெய்யிட்டு யானைப் படையாள தாளுங் களம்புக்கே ஏனைப் படையோ டெதிர்த்துப் பொருதனரே, அன்னவர்தம் முன்ன ரனுமன் முதலானோர் துன்னிப் பொருதழித்தார், தோலா வதிகாயன் தன்னைச் சிலைராமன் றம்பி யெதிர்ந்தவர்கள் இன்னுற் றயர்வுற் றிருக்கையிலோ ராரியனும். 43. கூ.ரம்பு தந்தவனைக் கொல்லென் றெதிர்பொரவே பூரியனு மாவி பொருக்கென் றொழித்திட்டான்; வீரர் விரைந்தோடி வேல்வேந்த னுக்கோ த மாரி பொழிகண்ணான் மற்றும் துயர்கொண்டே. 44, எம்பியைமுன் றோற்றே னெத்தனை யோ வேல்வீரர் அம்புக் கினியவிரை யா யினா ரா கெட்டேன் செம்பிட்ட மாமேனிச் சேனைத் தலைவர்களும் எம்பிக் குறுதுணையா வேகினா ரென்செய்கேன்! 45. என் றின் னனவா றினைந்து புலம்பியிடை நின்று மறுபடியும் நெகிழ்ந்து புலம்புகையில், வென்று களங்கொண்டு வீடுற்ற சேயோனும் சென்று புலம்புந் திருவாள ளை நோக்கி. 46. அப்பா வருந்துவதா லாகுவதென் னிவ்வுலகில் எப்போ தொருநா ளிறப்ப துறுதியன்றோ? இப்போதே யான் சென் றிகலார் தமை நாறித் தப்பாது மீள்வனெனத் தான்றேற்றிச் சென்றனனே. 42. இன்னுற் று-துன்புற்று. 44. செம்பிட்ட்-உ தியான, செந்நிறமான,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/466&oldid=987979" இலிருந்து மீள்விக்கப்பட்டது