பக்கம்:இராவண காவியம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. செய்யோன் விளர்ந்து படவே, சிவந்து சிறுவர் பிறந்த பொழுது நெய்யா டவந்து நெடியோ னுவந்து நிலமாள் கவென்று நெடிய கையான் முகந்து மலைமார் பணைந்த கனியே யிடும்பர் கணையால் ஐயோ வருந்தி யட்டா புலம்பி யழவே யிறந்த தழகோ ? 51. கொலைவா ணர்விட்ட கணை மார் பு/தொட்ட குறியா லேபட்ட மகனே மலைவா ணரிட்ட குலைவா ழைபபட்ட வடிதே னை விட்ட மலர்போல் கலைவாணரட்ட விழிம் துபட்ட களமீ துசொட்ட கலுழி அலைவா ணர்விட்ட கலமீ துபட்ட வலையோய் வுபட்ட தட.டா! 52. திசையெட் டுமொன்று பட வெற்றிகொண்டு திடமுற் றுயர்ந்த திறலோன் இசைநட் டெழுந்து துளிர்விட், டுயர்ந்த வெழில்சொட் டநின்ற வெழிலே ! திசைகெட் டுவந்து நகர்முற் றிநின்ற திருவற் றவம்பர் கணையால் பசைகெட் டுலர்ந்து பரிவுற் றுநொந்து படவிட் டிறந்த தழகோ? 53. ஏடா ளர்கண்ட விசையோ டுவந்த விறையோன் பயந்த விறையே! நாடா ள நின்ற நினைவே கவின்று நகர்கு ழவந்து நலியும் கேடா வர்தந்த கணையா லிருந்து கிளை சூ ழநின்று கதறும் காடா ளவென்று சமைவா கிநின்ற கனியே கனிந்த திதுவோ ? 50. செய்யோன் - சூரியன், விளர்த்தல்-வெளுத்தல், 51. மலர்போல் விழிமீ து செசட்டகலுழி. கலுழி கண்ணீர், நெய்யாடல் ஈன்ற தாய் எணணெய் தேய்த்துக் குளித்தல். 53. ஏடாளர்-புலவர். கர்டு சுடுகாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/480&oldid=987997" இலிருந்து மீள்விக்கப்பட்டது