பக்கம்:இராவண காவியம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

atu படலம் 487 8. மாரணி காண வேண்டி னூருள் தமிழ் மக்கள் யாருமே துணையி லாதா னென்செய்வா னொருவன் பாவம்! ஆரிய மறவர் தம்மை யடைந்து தான் மேற்கொண் டுன்ள காரிய மீனைய தென்று கழறினான் மான மில்லான். 9. மற்றவ ரதனைக் கேட்டு மன்னனே வருந்த வேண்டாம் சுற்றமு நண்புந் தோன்றாத் துணைவருந் துயரம் போக்கற் குற்றரு நாங்க என்றோ வுறுகுறை யுண்டோ வூரைச் சுற்றுவ மின்றே யின்பந் தோய்தரும் படிநா மென்றார். 10, என்றவர் கூறக் கேட்ட விரண்டக னுவகை பூத்து நன்றுநன் றெம்மீ ரின்றே நகரணி கண்டு மீள ற் கன்றுபோல் முரச மின்று மறைகென வறைந்தா ரூரார் அன் றுபோ லின் று மானா ரரசனும் வெளிப்பட் டானே, 11. இலங்கைமா நங்கை யந்த விரண்டகன் வரவு காண மலங்கியே விளக்க மென் னும் மலர்விழி பொத்திக் காணும் பு/லங்கெட வீருள தென்னும் புரிகுழல் விரித்தே யில்லர் திலங்கிடு கதவ வாயைத் திறந்திடா தினைந்தா ளம்மா. 12, வென் றெறி முரச மார்ப்ப வெற்றிவேற் கொற்றத் தண்ணல் மன்றலங் குழலி யோடு மணவிழாக் கண்ட.. நன் னாள் ஒன்றிய நிலையை யெண்ணி பள்ளு டைத் திலங்கை மானும் இன்றைய நிலையை பொப்பிட் டினை தல்' போ லிருந்த வில்லம். 13. கருவிடைப் பூத்து மானங் காய்த்தறப் பழுத்துப் போந்த உருவிடைச் சுவைக்கச் சொட்டு மொழுக்குடைத் தமிழ் ரில்லம் ஒருபுடைக் கதவ மேனு முவந்தில வுவுவா ரோடு தெருவிடைப் பிணம்போ லே பூந் தேரிடைச் சென்ற னம்மா . 14. மலங்கல் - மயங்கல். திலங்கல்-விளங் கல். 12, பலகணியிற் பதுங்கிப் பார்த்த னர். 13. மானம் பூத்துக்காய்த்து. புடை-பக்கம். இ-31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/503&oldid=988004" இலிருந்து மீள்விக்கப்பட்டது