பக்கம்:இராவண காவியம்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டும் இடம் 22. எனிற்பு கன்றதன் படியுமர் வாழவே யெம்மோர் இனித்த டுக் கிலா திருந்திடச் செய்குவே னென்றான்; தனித்து முன்னவர் தேடிய தமிழ்க்கரு வூலம் அனைத்தும் போக்கியின் நிலையுறச் செய்யீரலி டகனும். 23. என்று கூறச்சுக் கிரீவனு மெழுந்தெம் திறைவா! நன் று செய்யவே யுதவுவே னியன்றதை நானும்; வென்று பேரர சளித்தவன் குலத்தினர் வெறுக்கின் அன்று போலயா மடிமைகொண் டலைகுவோ மென்றான். 24. மின் னை வீழ்த்தியே யொளிமிகுந் தமிழக விந்தக் தன் னை நாத்தழும் பாதுகாத் துயர்பழந் தமிழ மன்னை வீழ்த்தியே யாரியர்க் கடிமையா வந்த மன்னர் வாழ்த்தியா மாமென வழிமொழி வகுத்தார். 25. படியி னன் றிகொன் றர்க்கிலை யுய்தியொப் பந்தப் படிந டக்கிலே னெனிற்றச ரதன் மகன் பகையாய் அடிமை யாகியே யலைகுவேன் முன்னைபோ லாணை; படைவ லோயிதி லையபின் றெனவடி பணிந்தான். 26. பணிந்து கூறிய வீரண்டகற் றழுவியப் பாவி துணிந்து ளேனறி வொழுக்ாமிக் குடையையுன் சொல்லைத் தணிந்து வாழ்கென வாழ்த்தினன்; மணிமுடி தன் னே அணிந்து பேரர சாக்கிய வகையினை யறைவாம், 15. முடிசூட்டுப் படலம் வேறு 1. அந்தநா ளேக விவ்வா றடுத்தநா ளயோத்தி ராமன் மூந்தநா ள யோத்தி விட்டு மொய்குழ லோடு கானம் வந்தநா முடிந்த தன் றோ? மணிமுடி புனைந்து பின்னோய் இந்த நா ளேநன் னாளா வேகுகா ளாகச் செய்வாய். 23. கருவூலம்-பொருட்குவை, 26. தணிந்து நிறைந்து. 1. நாம்வந் த-நலம்வந்த காரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/497&oldid=988010" இலிருந்து மீள்விக்கப்பட்டது