பக்கம்:காவியப்பரிசு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுதற்கா பொருளில்லை? இவண் நீ எம்முன் பகர்ந்தனையே பல வார்த்தை. அவற்றைக் கொண்டே நாடு கொண்ட, என் வெற்றிப் போரைப் பற்றி நல்லதொரு பரணியினைப் பாடேன்; கேட்போம். கவிவாணன் : நாட்டுமக்கள் சுதந்திரத்தை, நலத்தைக் கொன்று தரவே ட்டை மாடுகின்ற வெறியை, வெம்போல் மூட்டுகின்ற ஆதிக்க வேட்கை தன்னை முன்னிறுத்திப் புகழ்பாட மூடன் அல்லேன்!' கேட்டுக்கொன் : எனைப்பயந்த அன்னை நாட்டைக் கீழ்ப்படுத்தி ஆளுகின்ற மன்னா! என்னை வாட்டுவித்து எக்கொடுமை செய்த போதும் வாய்திறந்து உனைப்புகழ்ந்தோர் வார்த்தைபாடேன். இலங்கைக்கன் : காய்சினத்தை மூட்டுகிறாய் கவிஞ! கேட்ட கவிதையினைப் பாடமறுக்கின்ற நின்றன் வாய் திறக்க வைக்கவழி வகுக்கும் மார்க்கம் வகை!பலவும் அறிந்தவன்தான்! நினைவிற் கொன்நீ! போய் இருந்து சிந்தனை செய்து இரண்டே மாதம் பொழுதுக்குள் பரணியினைப் பாடா விட்டால் நாய்கழுகுக் கிரையாவாய்! - ஐ விவாணன் : நன்று மன்னா! . நானுன்னைப் புகழ்ந்தொருசொல் பாடும் துன்பு நோயைவிட நீ விதிக்கும் மரணம் தன்னை நோகாமல் வரவேற்பேன். வருகின் றேன்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/21&oldid=989506" இலிருந்து மீள்விக்கப்பட்டது