பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

“... ஒரு சமுதாயம் (நல்லறிவாலும் நற் செய்கையாலும்) தன்னை மாற்றிக் கொள்ளாதவரை, இறைவனும் அதனை நல்லருளால் மாற்றி விடுவதில்லை” (13:11) என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது.

இதிலிருந்து நற்சிந்தனைக்கும் நற்செயல்களுக்கும் ஊற்றுக்கண்ணாக— உந்து சக்தியாக விளங்கும் கல்வியின் முக்கியத்துவமும் சிறப்பும் எல்லாவகையிலும் வலியுறுத்தப்படுவது தெளிவாகிறது.

இதிலிருந்து அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக உள்ள அறிவு வளர்ச்சிக்காக இறையருளை வேண்டுவது ஒவ்வொரு நல்லடியாரின் இயல்பாக இருந்தது.“இறைவா! என் அறிவை வளப்படுத்துவாயா! என் அறிவைப் பெருக்குவாயாக!” என்பன போன்ற து ஆக்களை ஒவ்வொரு இறைவேட்டலாக மட்டுமல்லாது தங்கள் இதய நாதமாகவே கொண்டிருந்தார்கள் வல்ல அல்லாஹ்விடம் பெருமானார் அதிகமதிகமாகக் கேட்ட து ஆவும் இதுதான் என்பர்.

கல்வி வளர்த்த நாயகத் திருமேனி

கல்வியின் பயனையும் சிறப்பையும் நன்குணர்ந்த பெருமானார் (சல்) அவர்கள் புதுமையான வழிகளிளெல்லாம் பொது மக்களின் கல்வியறிவை வளர்க்க - வளப்படுத்த வழிகோலினார்கள்.

அக்கால போர் முறைப்படி போரில் தோல்வியடையும் எதிரிப்படை வீரர்கள் வெற்றி பெற்றவர்களால் கைது செய்யப்படுவது வழக்கம்.

பிணைத்தொகை பணமல்ல—படிப்பு

சாதாரணமாகக் கைது செய்யப்படும் போர்க் கைதிகள் அடிமைகளாக்கப்பட்டு, கடினமான பணிகளைச்