பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


எலும்புருக்கி நோய்க்குத் தொற்றும் தன்மை உண்டு எனக் கண்டறிந்து கூறினார். இவர் எழுதிய மொத்த மருத்துவ நூல்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆகும்.இப்னு சீனாவின் மருத்துவச் செல்வாக்கு உலகில் சுமார் 500 ஆண்டுக் காலம் அரசோச்சியது எனலாம். இவரது மருத்துவ நூல்கள் பல பதிப்புகளைக் கண்டன அவை இன்றும் மருத்துவ உலகால் மதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுருங்கச் சொன்னால், கி.பி. பத்தாம் நூற்றாண்டை மருத்துவ வளர்ச்சியின் மைல் கல்லாகக் குறிப்பிடலாம்.அக்கால மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். தேர்வு மூலம் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்வு செய்யப்பட்டனர். பாக்தாது நகரில் மட்டும் 800 மருத்துவர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என வரலாறு கூறுகிறது.

பத்தாம் நூற்றாண்டின் உலகப் பெரு மேதைகள் இருவர்

இப்னு சினாவின் ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் யுனெஸ்கோ உலகளாவிய முறையில் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தது அதன் தொடர்ச்சியாக‘யுனெஸ்கோ கூரியர்’ சர்வதேச இதழ் சிறப்பு மலர் ஒன்றை 1981 இல் வெளியிட்டது. அதில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு மருத்துவம் உட்பட அனைத்து அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்கிய விஞ்ஞானிகளில் தலைசிறந்து விளங்கியவர்கள் இருவர் ஒருவர் இப்னு சினா,மற்றொருவர் சகலகலா மேதை அல்-பிரூனி என்ற சிறப்புக் குறிப்புடன் அச்சிறப்பிதழ் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அறிவு வேட்கை கொண்ட அல் - பிரூனி இந்தியாவுக்கு வந்து, இந்தியச் சிந்தனைகளை யெல்லாம் அறிந்து, அவை