பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-சிசு) இறையனார் அகப்பொருள் 185 சொல்லுதல். இவ்வாறு சொல்லினவிடத்துத் தலைமகன் மாட்டுப் புலவியே கொள்ளக் கருதிச் சொன்னாளாம் என்பது. அதற்குச் செய்யுள் : தலைவி தற்புகழ்தல் ‘ வெறிதரு பூந்தார் விசாரிதன் வேலைமும் நீர் வரைப்பின் நெறிதரு கோல்செல்லும் எல்லையுள் ளேமல்ல நீர்மையில்லாச் சிறியவர் வாழ்பதி யேயெமர் இல்லஞ் சிறிதெமக்கே எறிபுனல் ஊரஎவ் வாறும் அமையும் நின் இன்னருளே.' (உக) சூத்திரம் - சக அவன்வயின் கிளப்பின் வரைவின் பொருட்டே. என்பது என்னுதலிற்றோ எனின், இவ்வாறு சொல்லின் வரைவின் பொருட்டாகும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : அவன்வயின் கிளப்பின் என்பது.- நாடும் ஊரும் இல்லும் சுட்டித் தலைமகனைச் சார்த்திச் சொல்லின் என்றவாறு; வரைவின் பொருட்டே என்பது - வரைதல் என் பது, நீக்கிநிறுத்தற் பொருளவாம் என்றவாறு. யாதினை நீக்கிநிறுத்தலோ எனின், புலவியை நீக்கி நிறுத் தல். அஃது என்னை பெறுமாறு எனின், மேற்சூத்திரத்திற், 'புலவி' என்று அதிகாரம் வாராநின்றதாகலான் என்பது. பரத்தையை மறுத்தந்து வாயிலாற் புக்க தலைமகனை ஏற்று எதிர்கொண்டு வழிபட்டாள்; பின்னைக் காரணத்தின் நீங்கிய பொறாமைக்குக் காரணம் பெற்றுத் தோற்றிற்று. அது தோன்றத், தலைமகனை ஒன்றன் தலைக்கீடாகச் சொல்லுதல்; 'எம்பெருமான், நீர் பெரிதாகிய நாட்டிற் பெரிதும்மிக்க ஊரிற் பெரிதும் மிக்க குலத்திற் பிறந்த பேரொழுக்கத்தினீர்க்குத் தக்கதே சிறியேமாகிய எந்திறத்துத் தலையளி' எனச் சொல் லுதல்; இவ்வாறு சொல்லுவாள் புலவி நீக்குவான் சொல்லிற்றாக என்பது; அவ்வாறு சொல்லியதற்குச் செய்யுள் : மிக்கீர்க்கிது தக்கதன்றென்றல் ' வரியவண் டார்தொங்கல் மான்தேர் வரோதயன் வல்லத்தொன்னார் கரியவை வேல்கொண்ட காவலன் காக்கும் கடலிடம்போல் பெரியநல் நாட்டிற் பெரியால் ரிற் பெரிய இல்லிற்கு உரியமிக் கீர்க்கியல் பன்றுகொல் இவ்வா றொழுகுவதே.' (உகச)