சீனத்தின் குரல்/அவன் காலம்

விக்கிமூலம் இலிருந்து

அவன் காலம்

இயேசு பிறப்பதற்கு ஐந்து நாற்றாண்டுகளுக்கு முன்தோன்றிய கன்பூஷியஸ் செய்த மேற் சொன்ன சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு மக்கள் மக்கள் மக்களாக்க பயன்பட்டது. அவனுடைய காலம் வரையில் ஆண்களின் கைகளுக்கும், கருத்துக்கும் இடப்பட்டிருந்த தளைகளை அப்படியே கழட்டி பெண்களுக்கு இட்டுவிட்டான். அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலே முதலாவது, ஆண்களையும் பெண்களையும், சமூக அந்தஸ்திலிருந்து, வெவ்வேராகப் பிரித்து விட்டான். ஆண்களுக்கு உயர்வையும் பெண்களுக்குத் தாழ்வையும் சுமத்தினான்.

திருமணம் செய்துகொண்ட பெண்கள் தங்கள் சகோதரர்களோடு சமமாக உட்கார்ந்து உணவு உண்ணக்கூடாது. ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பெண்களுக்கு இயற்கையாக உள்ள பெண் தன்மையை போற்றி வளர்க்கும்படிச் செய்தான். நல்ல பண்புகள், நாகரிகமான பழக்க வழக்கங்கள், கைத்தொழில்கள், உணவு சமைத்தல், கணவனுடைய நண்பர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல், முதலான பண்புகள் வளரச் செய்தான். இவைகள், ஆண்குலக் கோணத்திலிருந்து பார்த்தால் சரியெனப்பட்டது. ஏனெனில், அதற்கு முந்திய ஆண்களின் நிலை வெறிகொண்ட பெண்களின் மதமேறியச் செயல்களால் தலை குனிந்து நின்றது. வெளிநாட்டுப் பண்பாடுகளின் முன்னால் வெட்கி நிற்கவேண்டிய நிலையையுண்டாக்கி விட்டது என்பதுதான் கன்பூஷியஸின் ஒரு முகமான முடிவு. அது மாத்திரமல்ல, மேலும் சில சுமைகளை பெண் வர்க்கத்தின் தலைமேல் ஏற்றி வைத்தான் கன்யூஷியஸ்.