சீனத்தின் குரல்/லட்சம் பேர் ஒப்புக்கொண்டனர்

விக்கிமூலம் இலிருந்து

லட்சம் பேர் ஒப்புக்கொண்டனர்

1926-ல் ஜர்மனியில் நடந்த கொமிங்டாங் மாநாட்டில் காலஞ்சென்ற சீனத்தின் சீர்திருத்தவாதி டாக்டர் சன்-யாட்-சன் அரசியல் சம்மந்தமாக தந்த மூன்று தத்துவங்களை தீர்மான வடிவத்தில் எழுதி அதை அந்த மாநாட்டில் கூடியிருந்த ஒரு லட்சம் பேர்கள் ஏக மனதாக ஒப்புக்கொண்டனர். உள்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் - இவ்வளவு கொந்தளிப்புக்கிடையே 1926 ஜூலை திங்கள் 9-ம் நாள் சியாங்-கே- ஷேக் கொமிங்டாங் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். பூ-பெய்-பூ என்ற ஒரு எதிர்க்கட்சியின் இராணுவ தளகர்த்தர் கீழிருந்துகொண்டே Hunan-ஹனான், Han- Ko ஹாங்கோ , Han-yun-ஹான் -யான், Hongo ஹாங்ஙோ முதலிய மாகாணங்களை கொமிங்டாங் சர்க்காருக்குக் கீழே கொண்டுவந்தனர். அதே போல், சன்-சிவான்-பாங் என்ற மற்றொரு தளகர்க்தரின் கீழிருந்து கொண்டே, கி-யாங்-அ, செகி-யாங், ஹூ-கியான், ஆன்-வெய்-கியாங் முதலிய மாகாணங் சுளையும் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டார்.