அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/விளையாட்டு வழி காட்டுகிறது

விக்கிமூலம் இலிருந்து

14.விளையாட்டு வழி காட்டுகிறது


விளையாட்டு எல்லோராலும் விரும்பப்படுகிறது. என்றும் வாழ்விற்கு வழிகாட்டுகிறது. விளையாட்டில் பங்கு பெறும் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றார்கள். விளையாடும் போது, சோதனைகளைச் சமாளித்து சாதனை புரியும் வெற்றியும் பெறுகின்றார்கள். விளையாட்டை ஒருவர் திட்டமிட்டு, வல்லுநரின் மேற்பார்வையில் விளையாடினாலும் அல்லது தன்விருப்பம் போல் விளையாடினாலும். தன்னை விரு பி வந்தவர்களை விரும்பி ஏற்றுக்கொள்கிறது விளையாட்டு

ஆதிகால மனிதர்கள் ஒய்வு நேரத்தில் விளையாட ஆரம்பித்தாலும், அந்தப்பயிற்சியே அவர்களின் வாழ்வுப் போராட்டம் வெற்றிபெற வழிகாட்டி நின்றது காட்டு மனிதர்கள் சமுதாயமாகி. நாடுகளுக்குள் தலைமை வெறி ஏற்பட்ட போது போர்கள் உண்டாயின. அது சமயம் தான் போர்வீரர்கள், வீரஉணர்வு பெறவும், தாக்கும்திறன் போன்ற உயிற்சிகள் எல்லாம் விளையாட்டு வடிவத்திலேயேதிகழ்ந்தன.

அப்படிப்பட்ட நேரத்தில் உருவாகிய விளையாட்டுக்கள் தான், தட்டெறிதல், வேலெறிதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் கத்திச்சண்டை, குதிரையேற்றம் முதலியன.

போருக்கு உதவிய தாக்கும் முறைகளே மேன்மை பெற்று, சுறுசுறுப்புடன் வாழவேண்டும் என்பதற்காக விளையாட்டு நிகழ்ச்சிகள் வந்திருக்கின்றன. எப்படி? என்பதை இனி நான் காண்போம்.

1. வலிமையான உடலை வளர்க்கிறது.

வலிமையான உடல் தான் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடி ப்படையாகும். வலிமை என்பது இயற்கையாகவே, முயற்சி இல்லாத சோம்பல் தனத்தாலே வந்துவிடாது.

நல்ல முறையான பழக்க வழக்கத்தாலும், ஒழுக்கத்தாலும் வலிமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியாலும் மனமு வந்து மேற்கொள்ளும் பயிற்சிகளாலுமே வலிமையைப் பெற முடியும். இந்த முறைகள் விளையாட்டின் மூலமே கிடைக்கிறது.

ஒரு நாணயத்திற்கு இரண்டு புறமும் தெளிவாக இருந்தால்தான் காட்சிக்கு அழகு. அது மக்களிடையே செல்லுபடியாகும். ஒரு புறம் தேய்ந்த நாணயம் ஒதுக்கப் படுவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களே!

அது போலவே, மனித வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் மிக முக்கியம். வலிமையான உடல்- வலிமையான மனம்.

விளையாட்டில் ஈடுபடும் உடலுக்கு வலிமை, திறமை, நீடித்துழைக்கும் ஆற்றல். அழகு மற்றும் ஆற்றல் எல்லாமே கிடைக்கிறது.

இதனால் நோயற்று வாழும் தன்மை நீடிக்கிறது. நிமிர்ந்து நிற்க, நிமிர்ந்து நடக்க, நிமிர்ந்து உட்கார என்பன போன்ற உடல் தோரணை (Posture) அமைகிறது. களைப்பில்லாமல் அன்றாட வாழ்வினைத் தொடரவும், சிறப்பாக வாழவும் செய்கிறது.

2. திறமைகள் -தெளிவும் தேர்ச்சியும் பெறுகின்றன.

முயற்சிகள், தோல்விகள், பலசிக்கலான போராட்டங்கள், அதனால் ஏற்படும் சோதனைகளின் கூட்டுக் கலவைதான் வாழ்க்கையாகும். தோல்விகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் பெறுவதுதான் வெற்றியாகும். எப்படி?

ஏற்படும் தோல்விகள், அவைகள் தரும் அனுபவங்கள் அறிவை மட்டும் தீட்டவில்லை. அதனுடன் உடலால் செய்யும் செயல்களில் தெளிவையும் தேர்ச்சியையும் ஊட்டுகின்றன.

ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை செயல்கள் திற்றல், நடத்தல், ஓடுதல், குதித்தல், தள்ளுதல், இழுத்தல்.

ஏறுதல், இறங்குதல், தூக்குதல், எறிதல், பிடித்தல்,தாக்குதல் போன்றவையாகும். இந்தச் செயல்கள் சரிவர தடைபெறாத போது தான் சரிவர காரியங்கள் நடைபெறாது சரிவடைகின்றன.

தரமாக மாறும்போது, திறமும் தேர்ச்சியும் பெருகும். இவற்றை எப்படி வளர்ப்பது? இவற்றை எளிதாக வளர்க்கும் இடம் தான் விளையாட்டுகள், விளையாட்டுக்களின் அடிப் படை இயக்கங்களும் மனிதர்களது அடிப்படை இயக்கங்களும் ஒன்று தானே!

அதனால் தான், விளையாட்டில் ஈடுபடும் அனைவரும் எளிதாக இயங்க, அழகாக செயல்படும் ஆற்றல் மிகுந்தவர்கனாகவும், அனைவரையும் கவர்கின்ற அற்புதத்திறன் மிக்கவர் கனாகவும் விலங்குகின்றார்கள்.

33 சமுதாயப் பண்புகள் செழிக்கின்றன.

"நான்’ என்ற அகந்தை வேண்டாம். அது அழித்துவிடும். "நாம் என்று நடப்போம். அது சக்தியைப் பெருக்கும் என்று. அறிவுரை கூறுவார்கள் ஆன்றோர்கள். அவற்றை வழி நடத் தும் வளமான களமாக விளங்குவது விளையாட்டாகும்.

கூடி சேர்ந்து ஆடுவதுதான் விளையாட்டு. எல்லோரும் ஒன்று தான், ஒருவர்தான் எல்லோரும்' என்ற மனப்பாங்கு விளையாட்டில் அமைந்தால் தான் விளையாடவே முடியும். பிறகு வெற்றி பெறமுடியும்.

ஆகவே, சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கவும், சுய நலத்தைப் போக்கவும், சமுதாய உணர்வை மேம்படுத்தவும், ஒழுக்கத்துடன் மற்றவர்களுடன் பழகவும் : பண்பாட்டுடன்மிளிரவும் விளையாட்டுக்களே செம்மை செய்கின்றன, உண்மைதானே?

4. அறிவும் ஆனந்தமும் உச்சநிலை அடைகின்றன.

'உன்னை அறிந்து கொள்' என்று போதித்தான் பேரறிஞன் சாக்ரட்டீஸ். 'தன்னை அறிந்தவன் தலைவன் என்கிறது நீதிப்பாடல் ஒன்று.

தன் நிலையையும், தன் தகுதியையும், தனக்குரிய வாய்ப்புக்களையும், அதை நிறைவேற்ற தனக்குரிய சாதக மான சூழ்நிலையையும் சக்தியையும் உணர்கின்ற ஒருவனால் தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும்.

தனக்கு என்ன திறமை; தன்னை மற்றவர்கள் எப்படி மதிக்கிறார்கள், என்பதை விளையாட்டில் மிக எளிதாகக் கண்டு கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் விளை யாட்டில் அதிகம் உண்டு.

விதிமுறைகள், விளையாட்டு நுணுக்கங்கள், ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வாய்ப்புகள்; எதிர்த்தாடுவோர் தந்திரத்தினைத் தகர்த்தும். தந்திறத்தால் வெல்லுகிற யுக்திகள் அறிவினை விருத்தி செய்வதுடன், ஆனந்த நிலையையும் தோற்றுவிக்கிறது. இந்த சக்தி விளையாட்டுக்கே உரிய தனிப் பட்ட சிறப்புச் சக்தியாகும்

5. ஓய்வும் உல்லாசமும் நிறைகின்றன.

எந்திரங்கள் மனித வாழ்வில் இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அடுத்தவரை நம்பி வாழத்தொடங்குகிற சூழ் நிலைகள் ஆக்ரமித்து விட்டன. சோம்பேறித்தனம் நாகரீகம் என்ற பெயரில் சிறையிட்டுக் கொண்டிருக்கிறது. ஆடை அலங்காரமும் ஆரவாரப் பேச்சும் தான் வாழ்க்கை என்று மனித இனம் நினைத்துக் கொண்டு, மத மதர்ப்போடு வாழ்ந்து கொண்டு வருகிறது.

அதன் விளைவு? பெயர் தெரியாத புதுப்புது நோய்கள் புற்றீசல் போல் கிளம்பி விட்டன. இனம் புரியாத மனக் கவலைகள்,குழப்பங்கள், சொல்லத் தெரியாத சங்கட உணர்வு கள் மனதுக்குள்ளே புகைந்து கொண்டிருக்கின்றன.

வசதிகள் உடலுக்கு அசதிகளை மட்டுமே தந்தன: அல்ல! வருந்தி வாழ்கின்ற வாழ்க்கை முறையையும் சேர்த்துத் தந்திருக்கின்றன. அதற்கு விடிவு? இருக்கிறது.

உழைப்பு - உண்மையான உழைப்பு-

உழைப்புக்குப்பிறகு வரும் ஒய்வு நேரத்தையும் உல்லாசமாகக் கழிக்க வேண்டும். உடலுக்கு உழைப்பையும், மனதுக்குக் களிப்பையும் தருவது விளையாட்டல்லவா!

துன்பம் கலவாத இன்பம் அளிக்கும் விளையாட்டு தான், இன்றைய மனித சமுதாயத்திற்குத் தேவை என்பதை உலகத் தார் உணர்ந்து விட்டனர்.

அறிவார்ந்த, வசதிபடைத்த நாடுகள் அனைத்தும் விளையாட்டைக் கட்டாயமாக ஆக்கி, மக்களை ஈடுபட வைத்துக் கொண்டிருக்கின்றன. நோயில்லா மனிதர்கள் தான், நாட்டுக்குத் தேவை என்பதை வற்புறுத்தத் தொடங்கி விட்டன. ஆமாம்! காலம் மாறிக் கொண்டு வருகிறது.

'உடல் நலம் தான் உண்மையான பலம், பணம் நிலம் அல்ல' என்பதை உணர்ந்தவர்களே இன்று நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் நாட்டின் ஓர் அங்கம் ஆவான், சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதுபோல, தனிப்பட்ட ஒவ்வொருவரும், சக்தியும் வலிமையும் உள்ளவராக இருந்தால் அவர் வாழும் சமுதாயம் சிறக்கும். அவர் வாழும் நாடு செழிக்கும்.

தனிப்பட்டவர் சிறக்கவும், சமுதாயம் செழிக்கவும், நாடு மேம்பாடடையவும் உதவுவது விளையாட்டுக்கள்தான். மனித குலத்திற்கு விளையாட்டுக்கள் தான் வழிகாட்டுகின்றன என்றால், அது உண்மையேயன்றி வேறல்ல. நாமும் நினைப்போம். இதன் வழி நடப்போம். பிறர் போற்ற சிறப்போம்.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும் என்ற முயற்சியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், கதை, கவிதை, நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இவர் எழுதிய 'ஒலிம்பிக் பந்தயத்தின் கதை' எனும் நூல் 1977ம் ஆண்டும், 'விளையாட்டுக்களின் கதைகள்' எனும் நூல் 1981ம் ஆண்டும், 'விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்' எனும் நூல் 1984ம் ஆண்டும் தேசிய விருதினைப் பெற்று இருக்கின்றன.

தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலை பட்டமும், டாக்டர் பட்டமும் (M.A., M.P.Ed. Ph.D.) பெற்றுள்ள ஆசிரியர், வானொலி, டெலிவிஷன், வாரப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்.

தமிழில் முதன் முறையாக "விளையாட்டுக் களஞ்சியம்" எனும் விளையாட்டுத்துறை மாத இதழை 1977ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி பணியாற்றி வருகிறார்.