ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஐன்ஸ்டைனுடைய அறிவாற்றலை

விக்கிமூலம் இலிருந்து



ஐன்ஸ்டைனுடைய அறிவாற்றலை உலகுக்கு விளக்கிய
அவருடைய மூளை

நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டைன், தனது 76வது வயதில், 1955-ம் ஆண்டு இறந்தபோது, அவருடைய சிந்தனைக் கபாலத்தில் இருந்த மூளைப் பகுதியை தனியே எடுத்து தக்க பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று வரையிலுள்ள உடற்கூறு விதிகள் இந்த மூளையினுடைய தோற்றம்போல யாருக்கும் அமைந்திருக்கவில்லை என்று மானிட உடற்கூறு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வட அமெரிக்காவின் கனடா நாட்டிலுள்ள ஹாமில்டன் நகர் Mc Master University மெக்மாஸ்டா் பல்கலைக் கழகத்தின் அறிவியல் துறை பேராசிரியர் ஆன்டாரியோ என்பவர், 35 ஆண்கள் மூளைகளையும் 56 பெண்கள் மூளைகளையும் எடுத்து, உடற்கூறு சட்டவிதிகளின்படி ஆராய்ச்சி செய்து பார்த்தார். அந்த மூளைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு அமைந்துள்ள மூளைப்பகுதிகளாகவே காணப்பட்டதாம்.

65 வயதுக்கு மேற்பட்ட 8 ஆண்களுடைய மூளைக்கூறுகளையும் அந்த பேராசிரியர் ஆராய்ச்சி செய்து பார்த்த போது, அவரவர் மூளை அவரவருடைய வயதுக்கு ஏற்றவாறு சாதாரணமாக எல்லா மக்களுக்கும் அமைந்துள்ள மூளைப்பகுதியைப்போலவே இருந்ததாகக் கண்டார்.

பொதுவாக, இந்த மூளைகளோடு ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய மூளையை அவர் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஐன்ஸ்டைனுடைய மூளையின் இரண்டு பகுதிகள், அதாவது கீழ்மக்களது தரத்தில் அல்லது நிலையில் மற்றவர்களை விடத் தாழ்ந்த நிலையில் அமையாமல், ஐன்ஸ்டைனுடைய மூளை அமைப்பு முறை, கட்டமைப்பு மற்ற மூளைகளைக் காட்டிலும் குறுகலாயிராமல், மூளைவரையறுப்புக்கு உட்பட்டிராமல், கட்டுப்பாடற்ற தளர்ந்த, மிகப் பரப்பால் திகழ்கின்ற தாராள மனப்பான்மையை உருவாக்குகின்ற முழு அளவுக்குத் திறந்திருக்கின்ற அகலமான அளவினை உடையனவாக உள்ளதாகக் கண்டு பிடித்தார் மற்றவர்களுடைய மூளையை விட ஐன்ஸ்டைனுடைய மூளை 15 சதவிகிதம் அகன்று, விசாலமானமாக அவருடைய மூளை அமைப்பு முறை இருந்தால்தான் அவரது சிந்தனை எல்லாம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதற்கு அடிப்படைக்காரணம் என்று அவர் அறிவித்துள்ளார்.

எனவே, ஐன்ஸ்டைனுடைய சிந்தனை மற்றவர்கள் மூளையின் சிந்தனையை விட மிக நீண்ட எதிர்கசலங்களுக்கும் பயன்படும் சிறப்புணர்ச்சியை அவரது மூளை உருவாக்கிக்காட்டியுள்ளது என்று கூறினார்.

அறிவியல் சிந்தனையாளர்கள் ஐன்ஸ்டைனுடைய விஞ்ஞான சிந்தனைகளைப் பற்றி விளக்கியபோது, ‘ஐன்ஸ்டைனுடைய சிந்தனையில் எதிரொலிக்கும் சொற்கள் எல்லாம் எந்த அமைப்புடனும் சேர்ந்து வெளிவருவிதில்லை. ஏறக்குறைய அவரது கற்பனைகள் எல்லாம் ஒரு எதிர்காலச் சிந்தனைக்குப் பயன்படும் ஒளிசக்தி வாய்ந்த சொற்களாக, தனித்தன்மையுடன் எதிரொலித்தன’ என்று இன்றும் அவர்கள் பாராட்டுகிறார்கள், அறிவியல் உலகமும் அவரை பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் அறிவியல் துறையில் தான் அற்புத விந்தைகளைப் புசிந்தார் என்யதல்ல. மனித வாழ்க்கையின் விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தவர் ஆவார். விஞ்ஞானத்தின் விளக்கங்கள் எவ்வாறு சிறப்பானவையோ அதனைப் போலவே, அவரது சமுதாயச் சிந்தனைகளும் சிறப்பாகச் சிறந்தன.

மனிதன் எப்போது உயர்ந்தவனாகக் காணப்படுகிறான் தெரியுமா என்ற கேள்வியை மனித சமூகத்தைப் பார்த்துக் கேட்ட ஐன்ஸ்டைன், அதற்குரிய பதிலை கூறும் போது,சிந்தனை செய்யும் தனித்திறன் காரணமாகவே மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான் என்றார். தனக்கென்று தேவைகள் எவையும் வேண்டியதில்லை. சிந்தனை மட்டுமே முக்கியமானது. சிந்தனையால் எதையும் சந்திக்க முடியும். மனிதனாகப் பிறந்தவன் எவனும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும், சிந்திப்பவன்தான் மனிதன். அவன் சிந்திக்கச் சிந்திக்கத்தான் மனிதனுடைய எண்ணங்கள் உரிய உருப்பெற்று சிறப்படையும். சிந்திப்பது மனிதனது சீரிய உரிமை, தனி உரிமை என்று சிந்தனையின் சிறப்பைப்பற்றி ஐன்ஸ்டைன் கூறியுள்ளார்.

தற்கால அறிவியல் அறிஞர்களில் தலைசிறந்த மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இவர் 1879-ம் ஆண்டு ஜெர்மனியில் அல்ம் என்ற நகரில் பிற்ந்த ஒரு யூத இன விஞ்ஞானி.

இனம் வயதிலேயே இந்த விஞ்ஞானி விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞானிகளே வியக்கத்தக்க விந்தைகளைப் புரிந்த வித்தகராகவே விளங்கியவர் ஆவார்.

ஐன்ஸ்டைன். தனது ஐந்தாவது வயதிலே காந்த ஊசியின் இயக்கத்தை ஆராய்ந்தார். சித்தாந்த விஞ்ஞானத்தில் (Theoretical Physics) மிகுந்த ஆர்வமுடையவராக இருந்ததால், அதை அவர் ஆழமாக ஆய்வு புரிந்தார். கணித அறிவும் பெளதிக அறிவும் இருந்தால்தான் பிற ஆராய்ச்சிகளைச் செய்வமுடியும் என்பதால், அவர் ஸ்விஸ் பாலிடெக்னிக் பள்ளியில் நான்கு ஆண்டுகள் படித்து அறிவியல் அறிவைப் பெற்றார்.

இந்த விஞ்ஞான மேதையின் ஐன்ஸ்டைன்தான், நியூட்டனுக்குப் பிறகு தோன்றிய உலகின் மாமெரும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்தார். 

பூமியின் மேற்பரப்பு உருண்டையா தட்டையா என்பதை மனிதன் பூமிக்கு வெளியே சென்று பார்த்து வரம்பு கட்ட வேண்டியதில்லை. தினசரி நிகழ்ச்சிகளிலிருந்தும் இந்த உண்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். எனவே, உருண்டையான பூமியின் மேல் யூக்ளிட் என்ற விஞ்ஞானியின் ஜியாமெண்டரி உண்மைகள் பயனற்றவையாகின்றன என்றார் ஐன்ஸ்டைன்.

அதுமட்டுமல்ல, பூமி உருண்டையானது எனது கணித, அனுபவ நிகழ்ச்சிகளால் எவ்வாறு அறிந்து கொள்ளப்பட்டதோ, அதேவகையில், வான சாஸ்திர உண்மைகளின் வாயிலாக தீர்மானித்து, இந்த உலகமே உருண்டை வடிவமானது என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மிக அரும் பாடுபட்டு, யூக்ளிட் விதியை தவறு என்று ஐன்ஸ்டைன் நிரூபித்துக் காட்டினார்.

எனவே, ஐன்ஸ்டைனுடைய விஞ்ஞான சித்தாந்தப்படி இந்த உலகம் நியூட்டன் கண்ட எல்லையற்ற உலகம் அல்ல; யூக்ளிட் ஜியாமெண்டரி கூறும் தட்டையான உலகமும் அல்ல, உலகம் உருண்டைமானதோர் எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது என்பதை மெய்ப்பித்தவர் மேதை ஐன்ஸ்டைன் என்றால் மிகையாகா.

இவ்வாறு மேதை ஐன்ஸ்டைன் தொட்ட அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வுகள் எல்லாம். இன்து வரை உலகத்துக் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

டாக்டர் ஐன்ஸ்டைனின் விஞ்ஞான ஆராய்ச்சிகள் உலகின் கவனத்தையே கவர்ந்து விட்டன. 1938-ம் ஆண்டு வரையில் டாக்டர் ஐன்ஸ்டைன் உலகம் முழுவதும் பயணம் செய்தபோது, அறிவியல் உலகம் அவரை இருகைகளேந்தி வரவேற்று மகிழ்ந்தது,

அறிவியல் உலகம் டாக்டர் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு தந்து பாராட்டியதோடு நின்று விடவில்லை. கோப்லி பதக்கம் என்ற மதிப்புள்ள பதக்கத்தையும் அளித்தது. மற்றும் பல பரிசுகளையும் விருமிகளையும் அவரது உலகப் பயணத்தின்போமி பெற்றார். டாக்டர் விஸ்மன் என்பவரின் கூட்டு முயற்சியில் ஜெருசலேம் என்ற நகரில் ஒரு பல்கலைக்கழகத்தையும் தோற்றுவித்தார்.

1922ம் ஆண்டில் உலகத்தை உலுக்கிய சர்வாதிகாகி இட்லர் ஆதிக்கத்தில் யூத விஞ்ஞானிகள் பெருமளவில் ஜெர்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதை டாக்டர் ஐன்ஸ்டைன் வன்மையாகக் கண்டித்தார். விஞ்ஞான ஆராய்ச்சியின் குரல்வளை நெறிக்கப்படுகிறது எனக் கூறி அறிவியல் சுதந்திரத்துக்காக ‘ஜெர்மனிக்கு மீண்டும் திரும்பமாட்டேன்’ என்று சபதம் செய்து சாகும் வரை ஜெர்மன் பக்கமே தலை வைத்து படுத்தவர் அல்லர் ஐன்ஸ்டைன்.

இறுதியாக தனது வாணாளை அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூ ஜெர்ஸியில் உள்ள பிரிஸ்டன் நகரத்திலேயே தங்கி விட்டார். அவர் பிறந்த நாடு ஜெர்மனி, இறுதியாக இறந்த நாடு அமெரிக்கா. காரணம், விஞ்ஞான உலக சுதந்திரத்தைக் காப்பபற்றிட தான் பிறந்த மண்ணைவே மறந்து விட்டார் ஐன்ஸ்டைன்.

அணு முதல் அண்அம் வரை, உலகத்தத்துவத்தை ஊடுருவி, ஆய்ந்து, உய்த்துணர்ந்து, பல உண்மைகளைக் கண்டுபிடித்து, புதுமையான, புரட்சிகாரமான தத்துவங்களை உருவாக்க முடியும் என்பதை அவனிக்கு உணர்த்திய அற்புத அறிவியல் வர்த்தகனாக விளங்கிய, வாழ்ந்து காட்டிய ஐன்ஸ்டைனைப் போல, நாமும் வாழ் வோமா? முயற்சிப்போமா? அதுதானே பிறவியின் சொத்து, உரிமை? செய்வோ!