வேங்கடம் முதல் குமரி வரை 4

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



வேங்கடம் முதல் குமரி வரை


(நான்காம் பாகம்)
- பொருநைத் துறையிலே -



கலைமாமணி
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



கலைஞன் பதிப்பகம்
10 கண்ணதாசன் சாலை

தியாகராய நகர்
சென்னை - 600017



RS. 70.00

VENKATAM MUTHAL KUMARI VARAI - IV)
by
Τho. Μu. ΒΑSΑΚΑRΑ ΤΟΝDΑΙΜΑΝ

First Edition : 1962
Fourth Edition : 2001
Published by
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T. Nagar, Chennai - 600 017

Typeset
LaserPoirt
Chennai- 600 083.

Printed at
Sakthi Printers,
Chennai - 600 021.

முன்னுரை

"வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப் பொருநைத் துறையிலே என்ற தலைப்போடு வெளியிட முனைகிறேன்.

இந்த நான்காவது புத்தகம் பழனி ஆண்டவன் திருச்சந்நிதியில் இருந்து துவங்கி வைகைக் கரையில் நடந்து பொருநைத் துறையிலே படிந்து கன்னிக்குமரி சந்நிதிவரை செல்கிறது. இத்துடன் தமிழ் நாட்டுத் தலயாத்திரையும் ஒருவாறாக முடிவுறுகிறது. இனி வடநாட்டுத் தலயாத்திரையைத் துவங்கவேண்டியதுதான். அந்தத் தல வரலாற்றுக் கட்டுரைகளும் வேங்கடத்ததுக்கு அப்பால் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக வெளியிட எண்ணம். இறை அருள் கூட்ட வேணும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்தன. அப்போது அவைகளைப் பாராட்டி எழுதிய அன்பர் பலர். அவர்கள் தந்த ஊக்கமே இக்கட்டுரைகள் நூல் வடிவில் வருவதற்கு காரணமாயிருந்தது. அந்த அன்பர்களுக்கு எல்லாம் என் நன்றி.

இந்த நான்காம் தொகுதியில் ஒரு நல்ல முகவுரையைச் சகோதரர் திரு. சா. கணேசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அது ஓர் அரிய ஆராய்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அவர்களோடு நான் இருபது வருஷங்களுக்கு மேலாகத் தொடர்பு கொண்டவன். அவர்கள் நடத்தும் கம்பன் பணியில் எல்லாம் பங்கு கொண்டவன். அவர்கள் ஆசியுடன் இப்புத்தகம் வெளிவருவது ஒரு பாக்கியம் என்றே கருதுகின்றேன். அவர்கள் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.

என் இலக்கிய வாழ்வை செப்பம் செய்தவர்கள் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள், அவர்களுக்கும் முன்னால் என்னிடம் அன்பு கொண்டிருந்தவர்கள் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள். அவர்கள் நினைவு என் உள்ளத்தில் என்றும் பசுமையாகவே இருக்கிறது. பொருநைத் துறையிலே என்ற நூலை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள் புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கு மேலாக இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பம் நன்றியும்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

முகவுரை

"வடவேங்கடம்; தென் குமரி,
ஆய் இடை
தமிழ் கூறும் நல் உலகம்”

(வடக்கில் வேங்கட மலையையும், தெற்கில் குமரி முனையுைம், கொண்ட நிலப்பரப்பே தமிழ் மொழி பேசும், உயர்ந்தோர் பொழும் நன்னாடு) என்று தமிழ் நாட்டின் எல்லையே, பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் பெரியார் உணர்த்தி நிற்கிறார். தமிழ் நாட்டை ‘நல் உலகம்' என்றது ஏன்? நன்மை பயப்பதும், மேலவர் வாழ்வதுமான நாட்டையே நல் உலகம் என்னலாம் இல்லையா?

ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அன்பும், அறனும், செறிந்து பண்பும் பயனும் மலர வாழ்ந்து காட்டியும், தேர்ந்துரைத்தும் வான்புகழ் பூத்த நல்லோர்களை உலகினுக்குத் தந்தது இந்நாடு, அறம், பொருள், இன்பம், வீடு அடைதலே மனிதப் பிறவியின் பயன் என்பதை உணர்த்தி, வாழ்வாங்கு வாழ, வழி வகுத்த மேலோர்கள் நிரம்பிய நாடு இது. இந்நாட்டு இலக்கியங்கள் முழுவதுமே மக்களை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி காட்டுவனவாகும். இகத்தில் உள்ள இன்பத்திற்கு ஓர் அளவு கோலாய் அமைவதுடன், பரத்தில் உள்ள இன்பத்தை உணர்த்தும் நல் ஓவியமாகவும் தமிழர் இலக்கியம் அமையும்.

இலக்கியங்களை எல்லாம் தொகுத்து, வகுத்து, பகுத்தறிவோமானால் பல்வேறுபட்ட வகைகள் இருப்பதை உணர்வோம். துறையாலும் முறையாலும் வேறுபட்டவை ஆனாலும், நெறியாலும் முடிவாலும் மாறுபடாமை தமிழ் கூறும் நல் உலகத்தின் அருமையாகும். அதனாலேதான் எந்த மொழியையும் விடத் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் மலிந்து பொலிகின்றன. சிருங்காரத் துறையில் பிரபந்தம் இயற்றினாலும் பெரும்பாலோர் கடவுளையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டனர். மன்னர் போன்ற மானிடர் மீது பாடியவர்களும் கூட இறைவன் தன்மையைப் புலப்படுத்த மறந்தாரில்லை. பல்வேறு காலங்களில், பல்வேறு துறைகளில், பல்வேறு புலவர்களால் முன்னர் பாடப் பெற்ற தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை நூல் (Anthology) ஆக்கினார்கள் பின் வந்தவர்கள். அவர்கள் கூட, அதற்கு, இறைவணக்கம் இன்றியமையாதது என்று கருதி எழுதிச் சேர்த்தனர் என்றால் நாட்டு மக்களில் மனத்தில் கடவுளுணர்ச்சி எவ்வளவு ஊறிக்கிடக்கிறது. என்பதை சொல்லவா வேண்டும்.

தமிழ் நாட்டுத் தொன்மையும், தட்ப வெப்பமும், சூழ்நிலையும், உண்டி முதலியனவும், சேர்ந்து மக்களை எளிய வாழ்வினராகவும் உயர்ந்த பண்பினராகவும் ஆக்கிவிட்டன. அந்த மனப்பண்பின் சிகரமே இன்று தமிழ் நாடு முழுவதும் வானளாவிய விமானங்களுடனும் கோபுரங்களுடனும் கோயில்களாக ஓங்கி உலகறிய விளங்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால் மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள கோயில்கள் அனைத்தையம் எண்ணிக் கூட்டிப் பார்த்தால் தமிழகம் ஒன்றில் மட்டும் உள்ள கோயில்களின் தொகைக்குக் குறைவேதான், இது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல.

அதனாலே யன்றே!, மாணிக்கவாசகப் பெருமான் 'எந்நாட்டவருக்கும் இறைவனாய் உள்ளவனை' 'தென்னாடு உடைய சிவன்!' என்றுரைக்கிறார்! 'சிவன்' என்றால் ஏதோ பூச்சுக்காரர்களுக்கே உரியவன் என்று கொண்டு நாம் இடர்ப்பட, வேண்டாம். 'சிவன்' என்றால் நன்மை பயப்பவன் 'நன்றுடையான்' என்றே பொருள். கடவுளைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான பெயர்களுள் 'சிவன்' என்பதும் ஒன்று. அந்தக் கடவுள் தென்னாட்டையே தன்னாடாகக் கொண்டு விட்டானாம். அதையே சிவலோகமாகவும் ஆக்கிக் கொண்டு விட்டானாம் அந்த அப்பு ஆர் சடையப்பன். 'நல் உலகம்' 'சிவலோகம்' இரண்டும் ஒரு பொருளையே தருவன என்பதை யாரே அறியார்?

ஏன் இறைவன் தமிழ்நாட்டைத் தன்னாடாக ஆக்கிக் கொண்டான்? இங்குதான் பண்ணோடு தமிழ் பாடும் பக்த மணிகள் பல்லோர் இருக்கின்றனர். சொல்லிலும், பொருளிலும் எல்லையில்லாப் பரம்பொருளைக் காண்பவர்கள் இருக்கின்றனர். 'பார்க்குமிடம் எங்கலும் நீக்கமற நிறைந்துள்ளான், போக்கும் வரவும் இல்லாப் புண்ணியன்' என்றுணர்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

அதற்கெல்லாம் மேலாக, பாடலொடு ஆடல் பயின்றிடவும், வேதமொடு ஆகம விழுநூல் கற்றிடவும், சிற்ப முதலிய தெய்விகக் கலைகளைத் தேர்ந்திடவும், வாணிக, நீதி மன்றங்கள் கூடிடவும், எல்லாக் கலையும், எல்லாப் பணியும், எல்லாப் பொருளும் ஈசனதே என்னும் மெய்யுணர்வு மலர்ந்திடவும், தக்கதோர் இடமாய் தழைத்தலை கோயில்கள். கல்வியால் அறிவும், அறிவால் ஒழுக்கமும் வளர்ந்து அவை கலை மலர்ந்து இன்ப மனம் பரப்பி மக்களை மக்களாக வாழவைப்பதும் கோயில்கள்தாம். ஆலாதாலன்றோ 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பதை உலக நீதியாய்க் கொடனர் தமிழ்ப் பெரு மக்கள். அந்த நீதிப்படி ஊர்கள் தோறும் கோயில்கள் ஓங்குவதாயிற்று. கோயில் மிகுதியால் மக்களின் சீலமும் பண்பும் சிறந்து, வாழ்வும் உயரலாயிற்று.

அத்தகைய நல் உலகத்தில், சிவலோகத்தில், ஆம் இந்தத் தமிழ் நாட்டில் நிறைந்து சிறந்து பயன் கொழிக்கும் கோயில்கள் எத்தனை எத்தனையோ! சிற்பத் திறமை, கலை நுணுக்கம், மூர்த்தி அழகு. உருவ அமைதி, பாவப்பொலிவு, தத்துவச் செறிவு முதலிய வேறுபாடுகள்தாம் எத்தனை எத்தனைபோ! தல மகிமை, தீர்த்தச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை, புராணக் கோட்பாடு, இன்னும் என்னென்னவோ அருமைப்பாடுகள். இவற்றையெல்லாம் நானும் நீங்களும் எப்படி கண்டு, அறிந்து துய்த்து மகிழ முடியும்? இதற்கென்று எங்காவது பள்ளிகள் உண்டா? அல்லது, ஏதாவது பாடம் சொல்லும் வகுப்புகளாவது உண்டா ?

நாமுந்தான் கோயில்களுக்குப் போகிறோம். பக்தியில் நாம் யாருக்கும் குறைந்தவர்களில்லை என்பதும் உண்மையாக இருக்கலாம். பெரும் பொருள் செலவு செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறோம்; பலநாள் தங்கிக் கால பூஜைகள் ஒன்றுகூடத் தவறாமல் கண்டு தொழுகிறோம். பாடு கிடக்கிறோம்; நோன்பிருக்கிறோம். அத்துடன் நமது கடமை முடிந்ததென்று திரும்பி விடுகிறோம்.

ஆனால் சிலர் இருக்கிறார்கள். கோயில்களுக்கெல்லாம் செல்வார்கள், பக்தியுடன் மூர்த்திகளைப் பரிவார்கள். விபூதி தீர்த்தம், துளவம் முதலிய பெற்றுக் கொண்டதும் அர்ச்சகருடன் அளவளாவுவார்கள், ஓதுவார்கள் முதலிய வயதானவர்களைக் கண்டால் கேள்வி மழை மொழிவார்கள். மூர்த்தியைக் காண்பார்கள், கண்ணக் கவர்வனவற்றின்பால் கருத்தையும் பதித்துக் கூர்ந்து நோக்குவார்கள். ஏதாவது ஐயம் ஏற்பட்டாலோ அன்றி மேலும் தெளிவு தேவைப் பட்டாலோ, கண்ணை மூடக் கொண்டு பார்ப்பார்கள். பின்னர் ராபர்ட் சீவெல், கில்ஹார்ன், பர்னல்பூலர், ஹீரா, ஹூல்ட்ஸ், ஜோவா துப்ரே, பெர்சி பிரவுன் என்று ஏதேதோ வாய்க்கு வழங்காத பெயரை எல்லாம் உச்சரிப்பார்கள். அப்புறம் ஐயம் தீர்ந்து தெளிவு எற்பட்டு விட்டதற்கு அறிகுறியாக “ஓஹோ! சரிதான்; அதானே பார்த்தேன்" என்று தமக்குதாமே ஆறுதலைந்து நடையைக் கட்டி கொண்டு விடுவார்கள்.

நம்மைப் போன்றவர்கள் கிட்டே வந்து “என்ன ஐயா, இதில் என்ன விசேடம்?” என்று கேட்டால் “இந்தக் 'கர்பெல்' இருக்கிறதே இது எந்த பீரியடா இருக்கலாம் என்று யோசித்தேன். 'வேவ்லைன்' இருப்பதாலே மகேந்திரனுக்குப் பின் காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது” என்ககூறுவார். 'கார்பெல்' என்றால் நமக்கு ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டுத் தூணின் மேலே, பழுவை ஏற்றி தூணின் மையத்திற்குக் கொணர்வதற்காக தமிழனால் வைக்கப்பெற்ற அதற்குத் தமிழில் 'போதிகை' என்று பெயர் என்பது, பாவம் அவருக்குத் தெரியாது. இவர்கட்கு கலையார்வம் நிரம்ப உண்டு. பிறமொழி அறிஞர்கள் எழுதிய விளக்க அல்லது ஆராய்ச்சி நூல்களைப் படித்துவிட்டு அதன் மூலமாக நம் நாட்டு கலைமுறைகளைத் தெரிந்து கொண்டு மதித்துப் போற்ற முன் வந்தவர்கள். அவர்களுள்ளும் மிகச் சிலர் இருக்கிறார்கள், முற்கூறப்பட்டவர்களில் இவர்கள் ஒரு அளவு வேறுபட்டவர்களும் ஆவார்கள். ஓவியம், சிற்பம், படிமம், முதலியவற்றை ஆங்கில நூல்களின் மூலமும், தமிழ் நூல்களின் மூலமும் தெரிந்து கொண்டு பின்னர் நூல்களைத் தூரத்தே வைத்துவிட்டு நேரே பொருளோடு உறவாடத் தொடங்கி விடுவார்கள். வேலைப் பட்டறைகளையெல்லாம் சென்று காண்பார்கள். வேலை முறைகளையும் வித்தியாசங்களையும் மனதில் வாங்கிக்கொண்டு விடுவார்கள். நிர்மாண வகைகள், வர்க்க பேதங்கள், மூர்த்தி பேதங்கள், ஆசன முறைகள், அஸ்த முத்திரைகள் முதலியவற்றில் தெளிவு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுச் செய்திகள், பக்திப் பாடல்கள், புராணத் தத்துவங்கள், தல புரானைக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் இவற்றிலெல்லாம் கருத்தைச் செலுத்தி கவினுடைபவற்றை மனத்திலும், கையேட்டிலும் பதித்துக் கொண்டு விடுவார்கள்.

இப்படித் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு சொல்லையும், சுவையையும், கல்லையும், செம்பையும் எல்லாம் சுவைத்துச் சுவைத்து இன்புறும் இயல்பினராகி விடுகிறார்கள். பின்னர் அவற்றை அணுகுவதில் அவர்கட்கு அச்சமோ, அன்றி சங்கோஜமோ கூட ஏற்படுவதில்லை. அகம் ஓட்டிய, ஒன்றிய, உறவே கொண்டு விடுவார்கள். அப்படித் தோய்ந்து துய்க்கும் கலையன்பர் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.

அத்தகைய சிறு தொகையினருள் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் ஒருவர். அவருடன் கல் பேசும்; செம்பு இசை பாடும்; சுதைகள் எல்லாம் நடமாடும். அவற்றை எல்லாம் அவர் காண்பார்; நோக்குவார்; தேர்ந்து தெளிவார். அத்துடன் அமைவரா? நண்பர்களை எல்லாம் கையைப் பிடித்து இட்டுச் செல்வார். சில முரண்டுகளைக் காதைப் பிடித்து இழுத்தும் செல்வார். கலைச் செல்வங்களின் முன்னே கொண்டு நிறுத்தி எல்லோரையும் துய்க்கும்படியம் செய்து விடுவார்! தாயின்புறுவதைக் கண்டு உலகின்புறச் செய்யும் வித்தையிலும் கைதேர்ந்தவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில், கலைப் பணியால் கடவுள் நம்பிக்கையையும் தெய்வ பக்தியையும் வித்திட்டு லிளையச்செய்த புண்ணியனாகவும் அல்லவா விளங்குகிறார். அவர்களை எல்லாம் தலயாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை கொள்ளவும் செய்துலிட்ட அருமையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?

இலக்கிய ரசலையும், கலைப் பித்தமும், பக்தி ஈடுபாடும் ஒருசேரப் பெற்ற தனி வழியை கடைப்பிடித்துச் செல்லுபவர் ஆனதால் ஒன்றில் ஒருசிக்கல் ஏற்பட்டால் மற்றொன்று வந்து கைகொடுத்துத் தீர்த்து வைத்து விடுகிறது. அவருக்கு. 'சிக்கல் விடுபடாதோ' என்று பிறர் மயங்கக் கூடிய இடங்களில் அந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளாமல் லாகவமாக அதைத் தாண்டி அப்பாற் சென்று விடுகிறார் இவர். பல இடங்களில் பெருமையாகப் புகழ்பாடுவதைக் கண்டு யாவரும் மகிழ்கிறோம். சில இடங்களில் கிண்டல் செய்வதைச் சிலர் ரசிக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். என்றாலும், உண்மையை உணர்பவர்கள் யாரும் அதைக் குறை கூற மாட்டார்கள். கிண்டல் செய்வதற்கு மனத்துணிச்சல் மட்டுப் போதாது. களங்கமற்ற உள்ளத்தில் அரும்பிய எல்லையற்ற ஈடுடாடு வேண்டும். அப்பொழுது தான் கிண்டல் பயன் தருவதாக இருக்கும். வெறும் மனத்துனிச்சலிலிருந்து வெளிப்படுவது கேவலம் வட்சையாகத்தான் அமையும்.

யதார்த்த வாழ்வில் அல்லது நாடகம், சினிமா போன்ற துறைகளில் அசம்பாவிதம் என்று கருதி ஒதுக்கப்படும் தோற்றம், கல்லிலும் செம்பிலும் உருவாகி ஆலயங்களுல் இருப்பதை நாம் அசம்பாவிதம் என்று எண்ணியதாவது உண்டா? அலது நம்மனையார் உள்ளத்தில் விகார எண்ணங்களை அவை உண்டாக்கியதாவதுண்டா ? தாயின் மடியில் கிடந்து பாலருந்தும் நிர்மமான குழந்தைகளைப் போன்றுதானே நாம் எல்லாம் கலையமுதை, அழகமுதைப்பருகி அமைதி பெற முயன்று கொண்டிருக்கிறோம். இல்லையா? அப்படித்தான் உள்ளத்தில், விசாரமோ, வெறுப்போ, பகமையோ சிறிதுமின்றிக் கிண்டல் செய்வது ஒரு அருமையான வேண்டத்தக்க பணி; கலையும் கூட அந்த கலையும் கைவரப் பெற்றவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள்.

"குலவித்தை கல்லாமற் பாகம் படும்" என்ற முதுமொழிக்கு பாஸ்கரன் அவர்கள் ஒரு சான்று. பாட்டனார் ஒரு நல் கவிஞர் தந்தையாரோ சிறந்த ஓவியப் புலவர். இலக்கிய உணர்வும், ஓவிய உணர்வும் இவர்க்குப் பரம்பரையாய் கிட்டிய செல்வம். நேர்மைக்கும் செம்மைக்கும் பெயர் பெற்ற வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களுடன் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. அவர்களுடன் பலகாலம் நெருங்கிப் பழகிய நற்பேறு இவருக்கு எதையும் ஆராய்வதற்குரிய நெறிமுறைக்கு ஆக்கம் தந்தது என்று சொல்லலாம். அதற்கெல்லாம் மேலாக ரசிகமணி டி.கே.சி. அவர்களுடன் இருந்த உறவும், ஈடுபாடும்தான் இவருக்கு எல்லா வல்லமையும் கொடுத்தவை என்று கூற வேண்டும். விஷயத்தை அணுகுவது. ஆய்வது, தேர்வது, துய்ப்பது, எடுத்து விளக்குவது போன்றவற்றில் ஒரு தனி ஆற்றல் ஏற்படச் செய்தது அந்த உறவே என்று சொல்வோமானால் தவறில்லை.

இப்படியாகப் பெற்ற நலன்களை எல்லாம் பேணிக் காத்து, வளர்த்துச் சீரிய முறையில் உலகிற்களிக்க உதவிய மற்றொன்றையும் நாம் மறத்தற்கில்லை. அதுதான் இளமையிலிருந்தே பல்வேறு இடங்களில் பணியாற்றிய காலங்களில் கிடைத்த ஓய்வையும், ஏற்படுத்திக் கொண்ட ஓய்வையும் தல யாத்திரைக்கும், இலக்கிய வரலாற்று சிற்பப் பணிக்குமே பயன்படுத்திக் கொண்ட அந்த ஆர்வம் இருக்கிறதே அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

"வேங்கடம் முதல் குமரிவரை" என்று பொதுத் தலைப்பு அமைத்துக் கொண்டதே ஓர் அருமை. பண்டைத் தமிழன் மரபுப்படி, பெயர் அமைந்திருக்கிறது என்று உவகை ஏற்படும் அதே காலத்தில், வாசகர்களை எல்லாம் தென்றிலின் இன்பத்தை அனுபவிக்கச் செய்வதைப் போல், தெற்கு நோக்கி அழைத்துச் செல்லும் அருமை எண்ணி எண்ணி மகிழக் கூடியதாக இருக்கிறது.

“வேங்கடம் முதல் குமரி வரை” தொகுதியில் நான்காம் பகுதி இது. இதில் 30 கட்டுரைகள் உள்ளன. இலக்கியப் பூங்கா ஒருபுறம்; சிற்பக் கலைக்கூடம் மறுபுறம்; ஆராய்ச்சிட் பட்டறை இன்னொரு புறம்; பக்திப் பஜனைக் கூடம் வேறொருபுறம்; வரலாற்றுக் கதைக் கூடம் பிறிதொரு புறம் என்று இப்படியாகப் பல்வேறு துறைகளையும் இந்தக் கட்டுரை உலகிலே காணலாம்.

அன்புடன், ஆர்வத்துடன், உள்ளே செல்லுவோம். விருப்பு வெறுட்பின்றி அணுகுவோம். அருமை பெருமைகளை நன்றாக அனுபவிப்போம். நம்மை எல்லாம் இட்டுச் செல்லும் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் நம்முடன் இருந்து தக்கபடி உதவுவார். இனியும் முன் வாயிலில் காத்துக் கொண்டிருப்பானேன்? வாருங்கள், உள்ளே நுழைவோம், வாழ்க பாஸ்கரன்; வளர்க அவர் பணி" என்று! வாழ்த்திக் கொண்டே!

கம்பன் அடிட்பொடி
சா. கணேசன்




சமர்ப்பணம்
தமிழப்பெரும்கவி - முதுபெரும் புலவர்

அமரர்
வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்

அவர்களுக்கு

நான்காம் பதிப்பின் முன்னுரை

“வேங்கடம் முதல் குமரி” வரை என்ற பொதுத் தலைப்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள நான்கு தொகுப்புகளின் நான்காவது பதிப்பு இது, எங்கள் தந்தையார் திரு. பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மேற்கொண்ட திருப்பணி, தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிக் கட்டுரை எழுதத் தொடங்கியது தான். அந்தத் துறையில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்த கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் தொண்டைமான் அவர்களை மேலும் ஊக்குவித்து அவர்கள் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொடராகக் கல்கியில் வெளியிட்டு உற்சாகம் ஊட்டினார்கள்.

மகாகவி பாரதி பாடியது போன்று: “காவிரி தென் பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி" தீரங்களிலே, என்றோ நமது முந்தையோர்களால் எழுப்பப்பட்ட திருக்கோயில்களுக்கெல்லாம் தொண்டைமானவர்கள் காமிராவும் கையுமாகச் சென்று. அந்தக் கோயில்களின் வரலாற்றுப் பின்னணி, இலக்கியப்பெருமை, சிற்பச் செல்வங்கள் ஆகிய சிறப்புக்களையெல்லாம் கண்டு, தெளிந்து அவற்றை, படங்களுடன் கட்டுரைகள் வாயிலாகத் தமிழ் மக்கள் முன் வைக்கத் தலைப்பட்டார்கள். கல்கி இதழில் வாராவாரம் கட்டுரைகள் வெளி வரத் தொடங்கியபோது நல்ல வரவேற்பும் கிடைத்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் நம்பிக்கையும் நாட்டமும் உடையவர்கள் கட்டுரையைப் படித்த சூட்டோடு அந்தந்த ஊர்களுக்கு யாத்திரை கிளம்பியதும் உண்டு, பக்தர்கள், கலை அன்பர்கள் எல்லோருக்கும் இந்தத் தொகுப்பு வழிகாட்டியாகவும், கையேடாகவும் உதவியது என்றால் அது வெறும் புகழ்ச்சியில்லை.

வணக்கத்துக்குரிய காஞ்சி முனிவரவர்களும், தருமையாதீன குருமகா சந்நிதானம் அவர்களும் கூட, இந்தக் கட்டுரைகளைப் படித்து அனுபவித்ததோடு அமையாமல், தொண்டைமானவர்களைத் தங்கள் தங்கள் மடங்களுக்கே வரவழைத்துப் பாராட்டி, பட்டமும் நல்கி இந்தத் திருப்பணிக்குத் தங்கள் நல்லாசிகளை வழங்கியிருக்கிறார்கள். எத்தகைய பேறு அது திரைப்படத் தொழில் அதிபர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள், முதல் பதிப்பு வெளி வந்ததும் அதனை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாகக் கொண்டு ஆயிரம் ரூபாய் பரிசளித்து கோலாகலமாகப் பாராட்டு விழாவும் நடத்தியிருக்கிறார். கோவை நன்னெறிக் கழகத்தாரும் தங்கள் பங்குக்கு இந்தத் தொகுதிகளில் ஒன்றின் வெளியீட்டு விழாவைக் கோவையில் கொண்டாடிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

"வேங்கடம் முதல் குமரி வரை" முதல் பதிப்பு 1960 ஆம் ஆண்டு, திருநெல்வேலி எஸ்.ஆர்.எஸ், புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் 3000 படிகள் வெளியிட்டார்கள். அவர்கள் ஆர்வம் வீண் போகவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள்ளகவே அத்தனை படிகளும் லிற்பனையாகி விட்டன. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1964 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கொனர்ந்தார்கள், அவையும் நாளாவட்டத்தில் விற்பனையாகி விட்டன. கைவசம் படிகள் இல்லாத காரணத்தால், டெல்லியிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும், பூனாவிலிருந்தும், தமிழ் நாட்டு ஊர்களிலிருந்தும் அன்பர்கள் புத்தகம் கேட்டு எழுதிய போது அனுப்பமுடியாத நிலையில் மிகுந்த மனச்சங்கடத்துக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சூழ்நிலைகள் சரிவர அமையாததால் உடனடியாக மறு பதிப்பைக் கொண்டு வர இயலாது போய் விட்டது. அருமைத் தந்தையார் அவர்களின் மறைவுக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது பதிப்பு வெளிவந்தது. இதனை வெளியிட சென்னை அபிராமி நிலையம் முன் வந்தது.

மூன்றாவது பதிப்பும் விற்பனை ஆகிவிட்டதால், அன்பர்கள் விரும்பிக் கேட்கும்போது தரமுடியாத சூழ்நிலை. அப்போதுதான் மறுபதிப்புக்கான அவசியத்தை உணர்ந்தேன். நான்காம் பதிப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறது. முதல் பதிப்பின் போதே, இந்த நான்கு தொகுப்புக்களுக்கும் என் தந்தையாரின் உற்ற நண்பர்களாக விளங்கிய நால்வர் அற்புதமான முகவுரைகளைத் தந்து உதவியிருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி உணர்ந்து சொல்லும் சத்தியப் பிரமாணமாக அவை இந்தத் தொகுப்பினை அரண் செய்கின்றன. இதைவிட அருமையாக வேறு யார் சொல்லக் கூடும்? ஆகவே, இந்தப் புதிய பதிப்பிற்கும் அந்தப் பழைய முகவுரைகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நால்வரின் அன்புக்கும் தலைதாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

தொண்டைமானவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த சமயம், முதலில் நூற்றெட்டுக் கோயில்களைத்தான் தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் எழுதி முடித்தபோது 121 கோயில்கள் இடம் பெற்றன. தொகுப்பு வெளியிடப்பட்ட பின்னர் விடுபட்டுப்போன மற்ற கோயில்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாயின. அவற்றை எல்லாம் தொகுத்து, இந்தத் தலைப்பின் கீழ் ஐந்தாம் பாகமாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை அண்மையில் கலைஞன் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. “வேங்கடம் முதல் குமரி வரை” தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்புதான், தொண்டைமானவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று அங்குள்ள திருக் கோயில்களின் மூர்த்தங்களையும், கலைச் செல்வங்களையும் கண்டு சொல்லப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. அந்தக் கட்டுரைகளும் அபிராமி நிலையத்தின் வெளியீடாகவே “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பையும் கலைஞன் பதிப்பகமே வெளியிட ஆர்வம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமன்று, இந்தியத்திருநாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்களும், ஏன் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழன்பர்களும் இந்த நூல்கள் வெளிவரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள்,

தமிழ் இனத்தின் கலையுணர்வு, கலாச்சாரம், பண்பாடு இவற்றின் வளர்ப்புப் பண்ணையாகவே தமிழகத்துத் திருக்கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன- என்றென்றும் அவை அங்கே பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையுடன் இந்த நான்காவது பதிப்பினையும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம். இந்த நான்காம் பதிப்பினை நல்ல முறையில் கொணர்ந்திருக்கும் கலைஞன் பதிப்பகத்தாருக்கு நன்றி சொல்லப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

ராஜேஸ்வரி நடராஜன்

பாஸ்கர நிலையம்
சாஸ்திரி நகர்
சென்னை - 20




பொருளடக்கம்

எண்

பக்கம்

1. 19
2. 29
3. 37
4. 44
5. 52
6. 58
7. 66
8. 75
9. 83
10. 89
11. 98
12. 105
13. 112
14. 118
15. 126
16. 135
17. 143
18. 151
19. 159
20. 168
21. 175

22. 182
23. 189
24. 198
25. 205
26. 213
27. 221
28. 230
29. 238
30. 246
31. 254