பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தமிழ்ப் பழமொழிகள்


சாமி சக்தி பூசாரிக்குத் தெரியாதா?

சாமி மலையேறிப் போச்சு.

சாமியார் நாய் சிஷ்யனுக்குப் பயப்படுமா?

சாமியாருக்குச் சாமியார் வேண்டும்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான். 10615

(இடம் கொடுக்கமாட்டான்.)

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்பது போல.

சாமைப் பயிரும் விளைந்தால் தெரியும்; சக்கிலியப் பெண்ணும் சமைந்தால் தெரியும்.

சாமைப் பயிரைக் கதிரில் பார்.

சாய்ந்த பக்கம் சாய்வது.

சாய்ந்த மரத்தில் ஓடி ஏறலாம். 10620

சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம்.

சாயந்தரத்தில் கல்யாணம்; பிடி தாம்பூலம்.

சார்வு இல்லாதவனுக்கு நிலை இல்லை.

சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்து விடுவது போல.

சாராயத்தைத் தினம் குடித்தால் காராளனும் கடைமகன் ஆவான். 10625

சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேள்.

(கேட்பான்.)

சாராயம் குடித்த நாய்போல.

சாரை கொழுத்தால் மாட்டுக்காரனிடம் போகும்.

சாரை தின்னும் காட்டுக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கு.

(ஊருக்குப் போனால் தடுக்கண்டம் நடுமுறி.)

சாரையும் சர்ப்பமும் இழைவது போல. 10630

சால்போல் வயிறும் சப்பரக் கட்டைக் காலும்.

சால்போல வயிறு: ஊசி போலத் தொண்டை.

சால் வயிறு நிறைந்தாலும் சவலை வயிறு நிறையாது.

சாலாய் வளைந்தால் எனன? சட்டியாய் வளைந்தால் என்ன?

சாலாய் வைத்தாலும் சரி; சட்டியாய் வைத்தாலும் சரி. 10635

சாலை வழியே போகிற சனியனைச் சாயங்காலம் வீட்டுக்கு வா என்றானாம்.

சாலோடு அகப்பை தட்டாமல் போகுமா?

சாலோடு தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தீர்க்கும்.

(தண்ணீரால் தாகம் தெளியும்.)