பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

303


அளவுக்கு, வளர்ந்து விட்டது. அப்பரடிகள் நமக்கு இந்தப் படிப்பினையை உணர்த்தவே,

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்
கரைநின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்தாய் கயம்புக நூக்கியிட
நிலைக் கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்

அதாவது, நீர்நிலையின் கரையொன்றில் காவல் செய்வோர் நிற்கின்றனர். நீர்நிலைக்கண் வந்த ஒருவர், அக் கரையில் நின்ற வேறு சிலரை நீர்நிலையின்ஆழம் கேட்ட பொழுது “நீயே இறங்கிப் பார்த்துக் கொள்” என்று வழி காட்டினராம். அவர் நீர்நிலையில் இறங்கி நீர்நிலையின் ஆழத்தில் அல்லற்பட்டுக் கரையேற முடியாமல் தவித்ததாக வரலாறு. இங்கு நீர்நிலை சமயக்கால். ஆழங்காண விரும்பியவர் அப்பரடிகள். ஆழங்காட்டி அறிவுறுத்த வேண்டிய காவற் கடமை பூண்டோர் அப்பரடிகளின் வழி வழி சமய மரபில் வந்த சான்றோர். கரையில் நின்றவர்கள் சமண முனிவர்கள்.

சமண முனிவர்கள் துண்டச் சமயத் தத்துவக் கடலுக்குள் குதித்து ஆழந்தெரியாமல் அறிவினால் வியவ காரம் செய்து கரையேற முடியாமல் அல்லற்பட்டவர் அப்பரடிகள், என்று சிந்தனை செய்து, ஒப்புநோக்க எத்தகைய உண்மை வெளிப்படுகிறது. இன்னும் அந்த நிலை மாறிய பாடில்லை.

தமிழ் இலக்கிய உலகில் திருக்குறள் காலத்தால் மூத்தது. திருக்குறளை இலக்கியம் என்று மட்டுமே நம்முடைய சான்றோர் கருதுவதில்லை. திருக்குறள் ஒரு மறை நூல்; அதனால் அப்பரடிகள் திருக்குறளைத் தமது திருமுறைப் பாடல்களில் அணியென எடுத்து ஆண்டிருக்கின்றார். வள்ளுவர், இனியவை கூறல் அதிகாரத்தில்,