பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

367


வாயினாற்கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவல்ஆ ரூரன்
பேசின. பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்,

(7.14.12)

என்று தாம் இறைவனை ஏசவில்லை, இகழவில்லை என்று கூறித் தாம் பேசிய பேச்சைப் பொறுத்தருள வேண்டுவதையும் ஓர்க! இறைவனும் பிழை பொறுத்தருளி, பொன் தந்தருளினன். இந்த அற்புதத்தையும் தம்பிரான் தோழர்,

புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப் போகம்

புணர்த்த

நன்மையி னார்க்கிடம் ஆவது தந்திரு நாவலூரே"

(7.172)

என்று அருளியுள்ளமையை நினைத்தின்புறுக. அடுத்து, தம்பிரான் தோழர் வரலாற்றில் சிந்தனைக்குரியனவற்றுள் ஒன்று “ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுத்தது” திருவருளால் எதுவும் சாலும் போலும்!

சங்கிலியார் திருமணம்

தம்பிரான் தோழர் பல திருத்தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் வந்தடைகிறார். திருஒற்றியூரில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் சிந்தைக்கினியன. பண்டை நல்லூழ் கூட்டத் தம்பிரான் தோழர் நங்கை சங்கிலியாரிடம் மனம் போக்கிக் கவலையுடன் இருக்கின்றார்.

திருஒற்றியூர் இறைவன் எழுந்தருளி, சங்கிலியாரிடத்தில் தம்பிரான் தோழரை அறிமுகம் செய்துவைக்கும் பாங்கு நினைத்து நினைத்து மகிழ்தலுக்குரியது. பண்பார்ந்த நட்பியலுக்கு ஓர் அறிமுகமாக விளங்குகிறது.

சாருந் தவத்துச் சங்கிலி! கேள்,
சால என்பால் அன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்