பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



10. [1]கூட்டுறவுப் பண்பு

மது பாரதநாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் சமுதாயத்தைப் பிரித்து வைத்தால்தான் தாங்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கருதிப் பிரித்துவைத்தார்கள்.

பொதுவாக, கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பு; தவிர்க்க முடியாதது. நீண்ட எதிர்கால இலட்சியங்களை மனத்தகத்தே கொண்டு, வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமை யாததொரு பண்பாகும். நாம் சில ஆண்டுகள் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டுக் கூட்டுறவுப் பண்பிலே திளைத்தால் கோபதாப உணர்வுகள் கூடக் குறைந்து மறைந்துவிடும். கூட்டுறவு இயக்கம் நம்மைப் பண்படுத்துகிறது- பக்குவப்படுத்துகிறது. நல்வாழ்வுக் கூட்டுறவுச் சங்கம் (Better living Co-operative) என்ற ஒரு புதுவகையான கூட்டுறவுச் சங்கம் ஆங்காங்கு ஏற்படுத்தப்பெற்று வருகிறது. அம்மாதிரிச் சங்கம் கிராமங்களில் பரவலாக ஏற்பட்டுவிட்டால் கிராம மக்களிற் பலர் வழக்கு மன்றங்களுக்குச் செல்வது கூடத் தவிர்க்கப்படும்.

கூட்டுறவு இயக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் சாதாரண சராசரி மக்களின் நிலையை நன்றாக அறிந்திருக்க வேண்டும். சமூகத்தை ஒரே மாதிரியாகக் கருதுகிற உணர்ச்சி கூட்டுறவு இயக்கத்தினாலேயே ஏற்படும்.

சமுதாயத்தைப் படிப்பிப்பது கூட்டுறவு இயக்கத்தின் தலையாய பண்பாகும். வளர்கின்ற மனித சமுதாயத்திற்கு ஜனநாயகப் பண்பும், கூட்டு வாழ்க்கைப் பண்பும், சேவை உணர்வும் இன்றியமையாதன.


  1. பொங்கல் பரிசு