பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

29

பிற்காலத்து நூல்கள்தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப் பாடல்களைப் படித்திருக்கிறீர்களா? சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் படித்தது உண்டா?’' என்று அவர் கேட்டார். "சுவடிகள் கிடைத்தால் நிச்சயமாகப் படித்துப்பார்ப்பேன்" என்று ஆசிரியப் பெருமான் தைரியமாகச் சொன்னார்.

சில நாட்கள் கழித்து, இராமசாமி முதலியாரிடம் ஆசிரியப் பெருமான் போனபோது, அவர் சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதி ஒன்றை எடுத்துக் கொடுத்தார். ஆசிரியர் முதலில் அதைப் படித்தபோது சிறிது தடுமாறினார். நச்சினார்க்கினியர் உரையுடன் அந்தப் பிரதி இருந்ததால் ஒருவாறு அதைப் படித்துப் பொருள் செய்துகொண்டார். அதன் பிறகு இராமசாமி முதலியாருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். தமக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லை என்றே சொல்லி வந்தார். இந்த நிலையைக் கண்டு முதலியார் மிகவும் உவகை அடைந்தார். சிந்தாமணி ஜைன நூல் ஆதலால் அதிலுள்ள ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்து கொள்ளக் கும்பகோணத்தில் இருந்த ஜைனர்களிடம் இவர் சென்று அவர்களிடம் ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஜைன சமய சம்பந்தமான எல்லாச் செய்திகளையும் நன்றாக தெரிந்துகொண்ட பிறகு மீண்டும் படித்துப் பார்க்கவே, பல செய்திகள் நன்றாக விளங்கின. அப்பால் அதைப் பதிப்பிக்க வேண்டுமென்று விரும்பினார். பல ஏட்டுப் பிரதிகளைப் பார்த்துத் திருத்தமான பாடம் இதுதான் என்று திருத்திக்கொண்டார்.

சிந்தாமணியைச் சென்னையில் பதிப்பித்தால் நன்றாக இருக்குமென்று இவர் சென்னை வந்து இரண்டு வாரங்களுக்குமேல் தங்கி இருந்தார். அக்காலத்தில் சென்னையில் பல பெரும் புலவர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களுடைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். தேரழுந்துார், சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் எ ன் ப வ ரி ன் உதவியைப் பெற்றுச் சிந்தாமணிப் பதிப்பைத் தொடங்கினர், அவர் 'ப்ரூப்' பார்த்துத் தந்தார். ஆசிரியப் பெருமானும் மிகவும் சுறுசுறுப்பாக 'ப்ரூப்' பார்த்தார். முதல் முதலாக ஒரு பழைய நூலைப் பதிப்பிக்கும் பேறு கிடைத்தது கண்டு மிகவும் ஊக்கத்துடன் அந்தப் பதிப்பை நிறைவேற்றினார். அப்போது 500 பிரதிகளையே வெளியிட்டார்.

சீவக சிந்தாமணி வெளியான பிறகு தமிழ்நாட்டில் ஒரு புது மலர்ச்சி உண்டாயிற்று. ஆசிரியர் சிந்தாமணி உரையில் காட்டப்பெற்ற மேற்கோள்களுக்குரிய இடங்களையும் பல பழைய நூல்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகளையும் கொடுத்திருந்தார். அவற்றை