இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
பூமியின் புன்னகை
மறுபடி மலர்தல்
• அந்திமகள் போர்த்த
- ஆரிருளின் போர்வையிலே
- வெந்து மனம் வாடி
- விடிந்தவுடன் மலரானாய்
- சந்ததமும் பூத்திருப்பாய்
- சருகாகி மண் புகுந்தால்
- மந்திரம் போல் மொட்டாவாய்
- மறுபடியும் மலராவாய்!
நளினி
• கருமேகம் சரியக்
குறுநிலவு வருவதுபோல்
கருநாகம் நெளியக்
கமலம் மலர் வதுபோல்
ஒரு காதில் சுரிகுழல்
ஒசிந்தாடத்
தெருவோரம் நடந்துவரும்
சிங்கார நளினி
காவியம்
• கோல முகமதியிற் சிறுநாணக்
குங்குமப்பூச் சிவந்து
நீல விழிமலரிற் சிலகோடி
நெஞ்சி னுரை யுவந்து
கால மளந்திடும் சிறுபோதிற்
காவிய மனைத்தும் நீயாகி
ஜாலம் புரிகிற பேரழகே
சரித்திரமனைத்தும் நீதானே!