இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
பூமியின் புன்னகை
வராதிறந்து எமைமறந்து வலியேதுமில்லாத
சுகமரணம் கண்டெம்மை வலிக்கவைத்தார்.
ஒற்றுமையே பெரிதென்று பலகாலும்
ஊர்க்குரைத்த தலைவருக்கு நாமின்று
கற்றறிந்தோர் சாட்சியாகச் செய்கின்ற
காரியந்தான் ஒன்றுண்டு நன்றுண்டு
சுற்றுமுள்ள தேசீயசக்திகளை ஒன்றாக்கிச்
சுதந்திர பாரதமாம் நம்நாட்டை
மற்றவர்கள் பார்வையி லேமதிப்புயர்த்தி
மிகப்பெரிய காங்கிரஸை வளர்த்திடுவோம்.
(நவம்பர், 1975)