இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
பூமியின் புன்னகை
நோகாமல் நடக்கின்ற
நொந்தவர்கள் காதலினை
வேகாத குறைப்பிரிய
விந்தையினை நகைச்சுவையை
ஆகாவென் றதிசயிக்க
அடுத்தடுத்துச் சொல்லோணும்
'நோ'சோகம் 'நோ'மரணம்
நுவன்றீரேல் கதைசாகும்
தீபாவளி மலருக்குச்
சிறுகதையொன் றெழுதோணும்
மாபாரதக் காலமுதல்
மடிசஞ்சிக் கத்தைக்குள்
பூ பாரம் கெடுதலின்றிப்
புனிதமெனத் தேர்ந்தெடுத்த
'ஏ'சோரம் எதுவுமின்றி
எழுதோணும் என்கதையை.
(அக்டோபர்-1971)