பக்கம்:பூமியின் புன்னகை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

•சேமநிதிபோல் மேலெழுந்து
திசையெல்லாம் அருள்காட்டும்
தெளிவான கோபுரங்கள்

நாமகள்போய்க் குடியிருக்க
நயக்கின்ற தமிழ்ச்சங்கம்
நான்காம் புகழ்ச்சங்கம்.

பாமரரும் முனைமுறியாத்
தமிழ்பேசிப் பழகிவிட்ட
பண்பாட்டுப் பழக்கத்தால்

தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவுவதற்குத்
தலைநகரம் மதுரையாகும் !

பிட்டுக்கு மண்சுமந்த
பெருமானின் பரம்பரைபோல்
இன்றெமது தெருவெல்லாம்