பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"பேரார்வமெனும்‌ வலுவான பெரியவடம்‌, நம்மனைவரையும்‌ சுற்றிப்‌ பிணைத்துக்‌ கொள்ளட்டும்‌! ஆரா அன்பெனும்‌ சந்தன மரம்‌ எரிந்து, ஒளி பரப்பட்டும்‌! மணங்‌
கமழட்டும்‌! நம்‌ ஒன்றுபட்ட உறுதியாலும்‌ உழைப்பாலும்‌.
நமது தாயகம்‌, பூத்துக்‌ குலுங்கும்‌ ஒரு எழில்மிகு புதுமைப்‌
பூங்காவாகிப்‌ பொலியட்டும்‌! இவையாவுமான பின்‌, இம்‌
மாநிலம்‌ தன்‌ மகனாகிய என்னை அள்ளியெடுத்தணைத்து தன்‌னகத்தில்‌ மறைத்து வைத்து மனம்‌ மகிழட்டும்‌.”

–கன்னடக்‌ கவிதை