பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦களிற்றியானை நிரை[பாட்டு



டெண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது
மின்னுவிடச் சிறிய ஒதுங்கி மென்மெலத்

௧௫)துளிதலைத் தலைஇய 1மணியே ரைம்பால்
சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ
நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே.

-பெருங்குன்றூர் கிழார்.
 

(சொ - ள்.) ௫-௧௨. இகுளை = தோழியே! பெரிய கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை = பெரிய ஆண்பன்றியினைக் கொன்ற பிளந்த வாயினையுடைய புலியேறு, பலா அமல் அடுக்கம் = பலா மரங்கள் செறிந்த பக்க மலைகளில், புலவ ஈர்க்கும் = புலால் நாற அதனை இழுத்துச் செல்லும் இடமாகிய, கழை நரல் சிலம்பின் ஆங்கண் = மூங்கில்கள் ஒலிக்கும் மலையாய அவ்விடத்து, வழையொடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் = சுரபுன்னையோடு வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய நீர் அறாக் குழியில், படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய = அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தத்தினை நீக்கற்கு, பிடி படி முறுக்கிய பெருமரப் பூசல் = அதன் பெண்யானை அக் களிறு ஏறுதற்குப் படியாகப் பெரிய மரத்தினை முறித்திட்ட ஓசை, விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு = வான் அளாவிய மலை முழையின்கண் சென்றொலிக்கும் நம் தலைவர் நாட்டில்,

௧௩-௪. எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது மின்னுவிடச் சிறிய மென்மெல ஒதுங்கி = எண்ணற்கரிய குன்றுகளின் பக்கமாகச் செல்லும் மான்களின் நெறிகளில் மயங்கித் திரியாது மின்னல் வழிகாட்டச் சிறுகச் சிறுக மெத்தென நடந்து,

௧-௪. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குறும்பி வல்சி பெருங் கை ஏற்றை = ஈயல்களையுடைய புற்றின் குளிர்ந்த மேற்புறத்தே தங்கிய புற்றாஞ் சோறாகிய இரையினையுடைய பெரிய கையினையுடைய ஆண்கரடியின், தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் = தொங்கும் தோல் உறைக்குள் பொருந்தியிருக்கும் கூரிய நகம் பற்றிக் கொள்வதால், பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் = பாம்பு தனது வலிமையற்றொழியும் பாதிநாளிரவும் (செல்லுதல்),

௧௫-௮. துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் = மழைத் துளியைத் தன்னிடத்தே கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலை, சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ = பிடரி மறையப் பின்னே கோதி அம் மயிர்த் தொகுதியைப் பிழிந்து விட்டு, நெறி கெட விலங்கிய இச் சுரம் நீயிர் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறின் = வழிகள் செல்ல முடியாதபடி பின்னிக்கிடக்கும் இச் சுரத்

 

(பாடம்) 1. மழையே ரைம்பால்.