பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கோயில் அலுவலர்களின் தனித்தனி வேலைகள், கோயி ஆலச் சார்ந்த நகைகள், ஆஸ்திகள் முதலியவற்றின் விவரங்கள் காணப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சில முக்கியச் செப்பேடுகள் வருமாறு : 1 மதுரை மன்னர் திருமலையும் சேதுவேந்தர் முத்துராமலிங்க துரையும் பள்ளி மடத்தில் சந்தித்த பொழுது பளுத்தாண்டி குப்பச்சி அம்பலகாரனுக்கு .ெ ச ப் பு ப் ப ட் ட ய ம் ஒன்று வழங்கிச் சிறப்பித்தனர்.

= +

ைஇராமநாதபுரம் மின்னர் தளவாய் சேதுபதி இராமேஸ்வரம் அறங் காவலராக இருந்த இராமநாத பண்டாரத்திற்கு, இராமேஸ்வரத் தில் குற்றம் புரிகிறவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கி 1609இல் அதிகாரம் வழங்கினர்.

3 இராமே ஸ்வரம் ஆலயத்திற்கு மருதங்கநல்லுர் கிராமத்தை சர்வ மானியமாக இராமநாதபுரம் மன்னர் தளவாய் சேகiபகி 1616 இல் வழங்கினர். 4 இராமேஸ்வரம் ஆலயத்திற்கு எத்தனை வகை யான காணிக்கைகள், திரவியங்கள் தானமாக வந்தாலும் அவற்றைத் தவிர்த்து, தம்மால் கோவிலுக்கு வழங்கப் பட்டிருக்கும் சொந்த கிராமங்களின் வருவாயைக் கொண்டு, கட்டளை களே நடப்பித்து வர இராமநாதபுரம் மன்னர் தளவாய் சேதுபதி இராமநாத பண்டாரத்திற்கு கட்டளையிட்டு 1627இல் பட்டயம் கொடுத்தார்.