குடும்பப் பழமொழிகள்/தாய் தந்தையர்

விக்கிமூலம் இலிருந்து

தாய் தந்தையர்

அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது. -ஜெர்மனி

கோழி மிதித்தால், குஞ்சுக்குச் சேதமில்லை. - தமிழ்நாடு

தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை. -( , , )

பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும். -இந்தியா

செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய். -( , , )

தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்? - இந்தியா

புத்திசாலியான மகன் தந்தைக்கு மகிழ்ச்சி யளிப்பான்.

-ப. ஏற்பாடு

தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை அவனுடைய மௌனத்திற்கே அஞ்சுகிறான். -சீனா

மகனைப் புகழும் தந்தை தன்னையே புகழ்ந்து கொள்கிறான்
-( , , )

ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம், பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது. -( , , )

ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.

- இங்கிலாந்து

தந்தை தோட்டத்திற்குப் போனால், மகன் உழுவதற்குப் போவான். -( , , )

குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்களை நேசிப்பவன். -ஃபிரான்ஸ்

தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது. -ரஷ்யா

குதிரைகளும் மனிதர்களும் தாய்வழியைக் கொள்வார்கள்
- இந்தியா

அன்னை அவன் வயிற்றைப் பார்ப்பாள், மனைவி முதுகைப் பார்ப்பாள். -( , , )

பசுவின் பின்னால் எப்பொழுதும் ஒரு கன்று இருந்து வரும் சில சமயங்களில் அது சொந்தக் கன்றா யிருக்கும் சில சமயங்களில் வேறு பசுவின் கன்றா யிருக்கும்.
-கீழை நாடுகள்

தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம். -ஆப்பிரிகா

குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய். - தாக்கரே

தாய் எப்படி வளர்க்கிறாளோ, அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள். - இங்கிலாந்து

தாயாரின் செல்லப் பிள்ளைகள் வெண்ணை வெட்டும் வீரர்களாகவே வருவார்கள். - ( , , )

தழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள். - ( , , )

தாயில்லாத வீடு வீடாகுமா? - ( , , )

நடனத்தின் இசை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தை களின் அழுகுரலே கேட்கும். - ஜெர்மனி

தாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும்.
-ஸ்பெயின்

தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை.

- யூதர்
உங்களுடைய தந்தையையும் தாயையும் கௌரவியுங்கள்.
-ப. ஏற்பாடு

என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேட்டுக் கொள், உன் தாயின் சட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம். - ( , , )

எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை. -ஸ்பெயின்

புத்திசாலியான மகனால் தந்தை மகிழ்ச்சியடைகிறான். ஆனால் மூட மகனால் தாயின் உள்ளம் வருந்துகின்றது.

ப. ஏற்பாடு

தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான். -சீனா

தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான். - ( , , )

நல்ல கருவிலும் தீய பிள்ளைகள் உண்டாகி யிருக்கிறார்கள்.
-ஷேக்ஸ்பியர்

ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா விட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான். -ஸ்பெயின்

கலியாணம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிறான். -யூதர்

தாய் உன்னைப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள், மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள், பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந் தாள்... அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக்கொள்ளாதே. -எகிப்து

தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும். -ஸ்காட்லந்து

தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி. -பல்கேரியா

தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை. -எஸ்டோனியா

தாய்ப்பாலோடு பருகியதெல்லாம் ஆன்மா பிரிந்து செல்லும் போதுதான் அதனுடன் வெளியே செல்லும்.

-ரஷ்யா

குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும். -( , , )

கடவுள் உயரே யிருக்கிறார், பூமியில் தந்தை யிருக்கிறார்.
-( , , )
(ஒரு தந்தை ) ஒரு மகனை விட்டு ஒரு மகனிடம் போய் யாசிப்பதைவிட, வீடு வீடாக யாசித்தல் மேல்.
-( , , )

நல்ல மாற்றாந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது. -யூதர்

[அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.]

மூட்டை கோழிக்கு அடைகாக்கச் சொல்லிக் கொடுக் கிறது! -ஆப்பிரிகா

அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை. -( , , )

அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது.--அவள் ஈடற்றவள். -( , , )

குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தை விட்டு அசைய முடியாது. -அமெரிக்கா