குடும்பப் பழமொழிகள்/மருந்து

விக்கிமூலம் இலிருந்து

மருந்து

சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து.

-ஸ்லாவேகியா

இனிப்பான மருந்துகளும், இன்பமான நோய்களும் உண்டா ? - இந்தியா

சாவைத் தடுக்க மருந்தில்லை. -( , , )

ஒற்றடம் போடுதல் பாதி வைத்தியம். -( , , )

பூடு தின்ற பின்னும் நோய் தீரவில்லை. -( , , )

[உள்ளிப்பூடு அவ்வளவு விசேஷமாகக் கருதப்படுகின்றது.]

பட்டினி யிருத்தல் பரம ஔடதம். -( , , )

விடத்திற்கு மருந்து விடம்தான். -( , , )

மருந்து கால் பாகம், மதி முக்கால் பாகம். - தமிழ்நாடு

குரங்குப் புண்ணுக்கு மருந்தில்லை. -( , , )

மருந்தை உண்டு பத்தியம் காவாதவன் வைத்தியரின் திறமையை வீணாக்குகிறான். -சீனா

மருந்து கொல்லுவதில்லை, வைத்தியரே கொல்லுகிறார் .
-( , , )

பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை, தாம் உண்ட மருந்துகளாலேயே மடிகின்றனர். - ஃபிரான்ஸ்

அளவில்லாவிட்டால், மருந்தும் விஷமாகும். - போலந்து

கடவுள் ஒவ்வொரு பிணிக்கும் ஒரு பச்சிலை அளித்திருக்கிறார். -பல்கேரியா

வாழவேண்டியவனுக்கு மருந்துக்குப் பஞ்சமில்லை. -( , , )

பச்சிலைகளில் சிறந்தவை பசி, உழைப்பு, வியர்வை.

- குரோஷியா

நாள்தோறும் ஆப்பிள் உண்பவன் வைத்தியர் பிழைப்பைக் கெடுக்கிறான். - ஸெக்

நாய்க்கடிக்கு நாயின் ரோமம் மருந்தாகும். -ஹங்கேரி

வெந்நீரும், 'எனிமா'வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குணமாக்கலாம். - இதாலி

[குடலில் நீரேற்றும் குழாய் 'எனிமா.']

பூடு ஏழு பிணிகளைத் தீர்க்கும். -ரஷ்யா

தலையில் வலி யெடுத்தால், மூட்டில் தைலம் தடவு.

-ஸ்பெயின்

உணவோடு சேர்த்து மருந்தைக் கொடுத்தால், நோய் குணமாகா விட்டாலும், பசியாவது ஆறும். - ஆப்பிரிகா