பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


சுவாமிகள் மேடைக்கு வந்து கெம்பீரமாக நின்றார், சபையிலிருந்து கேள்விகள் சரமாரியாகக் கிளம்பின. “மாயாவியோர் கூடி வாழும் மதுரை” என்று குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென மக்கள் குழப்பம் செய்தனர். சுவாமிகள் தமது கரங்களை உயர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டு தமது கருத்தை விளக்கத் தொடங்கினார் :

மா என்ற சொல் திருமகளாகிய இலக்குமியையும், பா என்ற சொல் கலைமகளாகிய பாரதியையும், வி என்ற சொல் மலைமகளாகிய பார்வதியையும் குறிக்கிறது” என்று கூறி, அதற்கு ஆதாரமாகப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலிருந்து சில செய்யுட்களைப்பாடி விளக்கம் தந்தார். “மாபாவியோர் கூடி வாழும் மதுரை என்றால், திருமகளும் கலைகளும் மலைமகளும் சேர்ந்து வாழும் மதுரை என்று பொருள் படுகிறது. அதாவது, சகல செல்வங்களும் நிறைந்து விளங்கும் மதுரையில், செல்வம் கொழிக்கும் அத்திரு நகரில் இந்தச் சிலம்பை வாங்க ஆள் கிடைக்காதே என்ற கருத்துப்பட “மா பாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்ன போகாதீர்” என்று மதுரை நகரைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என்றார். சபையோர் சுவாமிகளின் புலமையை வியந்து கை தட்டிப் பாராட்டினர்கள். முன் வரிசையில் இருந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் ஒருவர் எழுந்து, “சுவாமிகளே ! நீர் எந்தக் கருத்தில் எழுதியிருந்தாலும் சரி; உமது புலமைக்குத் தலை வணங்குகிறோம்” என்றார்.


நடிப்பைக் கைவிட்ட கதை

இரணியன், இராவணன், எமன் முதலிய பாத்திரங்களைத் தாங்கிச் சுவாமிகள் நடித்து வந்தாரெனக் குறிப்-