பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

யாகச் சுவாமிகளைப் பாடவேண்டு மென்று எல்லோரும் வற்புறுத்தினர்கள். “எவ்வளவு நேரம் பாடவேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். தங்கள் மனம் போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். திருவாளர் பழனியா பிள்ளை அவர்கள், “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிறவரை பாடுங்கள்” என்றார்,

திருப்புகழ்ச் சந்தத்தில் ஆண்ட சக்கரவர்த்தி என்று பாடத் தொடங்கினர் சுவாமிகள். பாடிக்கொண்டேயிருந்தார். ஏற்கெனவே நெட்டுருப் போட்டிருந்த பாடலன்று ; அப்போதுதான் கற்பனையாக எழுந்த பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனர். பாடல் முடியவில்லை. மேலும் தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார் சுவாமிகள். சற்று நேரத்தில் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசை கேட்டது. மேளச் சத்தம் தனது பாட்டுக்கு இடையூறாக வந்த நிலையில் பாடலை முடித்தார் சுவாமிகள். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

புகழ் பாட மறுத்தல்

அக்காலத்தில் தமிழறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் சுவாமிகளைக் காண விரும்பினர். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவருமில்லையே! சுவாமிகள் மட்டும் ஏன் இன்னும் மன்னர் மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினால் உங்களுக்குக் ‘கனகாபிஷேகம்’ செய்வாரே மன்னர்!” என்றார்,

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதில்லை யென்று நோன்பு கொண்டவர். ஆதலால்