பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சாஸனங்கள்

7.தர்மத்தை முடியுமளவு அனுசரித்தல்.

தேவர்களுக்குப் பிரியனான பிரியதரிசி யரசன் எல்லா இடங்களிலும் சகல மதத்தோரும் சேர்ந்து வாழவேண்டுமென்று விரும்புகிறான். ஏனெனில், எல்லா மதங்களும் அடக்கமுடைமையும்1 மனத் தூய்மையும் அவசியமென்று சொல்லுவதில் ஒத்திருக்கின்றன. ஆனால், மனிதர் தம் மனப்போக்கிலும் பலவிதமாயிருக் கின்றனர் ; இச்சைகளிலும் பலவிதமாயிருக்கின்றனர். சில மதத்தினர் (என் கட்டளைகளை) முற்றிலும் பின்பற்றலாம். மற்ற வகுப்பார் சில பாகங்களைப் பின்பற்றலாம். அளவற்ற ஈகை எல்லோருக்கும் சாத்தியமில்லை ; ஆனாலும் அடக்கமுடைமை, மனத்தூய்மை,2 செய்ந்நன்றியறிதல், ஸ்திரபுத்தி இவை எக்காலத்தும் உயர்வைத் தருகின்றனவாம்.

மொத்தம் 5 வாக்கியங்கள்.