பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினோராம் சாஸனம்

111


11 தர்மத்தின் தானம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இவ்விதம் சொல்லுகிறான். தர்மத்தைத் தானஞ் செய்வதைவிடப் பெரிய தானமில்லை. அதுபோலவே தர்மத்தில் நேசமும் தர்மத்தில் உறவும் தர்மத்தில் உரிமையும். அவை பின்வருமாறாம். தாய்தந்தையரைக் கௌரவித்தல், நண்பர் அயலார் உறவினர்களுக்கும் பிராமணர் சமணர்களுக்கும் ஈதல், பிராணிகளைக் கொல்லாமை, இவையே மேன்மை. இதுவே புனிதமானது ; இதுவே செய்யக் கடவது' என்ற செய்தியை எல்லாரும் தந்தைக்கும் மகனுக்கும் சகோதரனுக்கும் எஜமானனுக்கும் நண்பர் அயலார் உறவினருக்குங்கூட தெரிவிக்கவேண்டும். இப்படிப்பட்ட தானமூலமாக ஒருவன் இம்மைப்பயனை யடைவதுடன் மறுமைக்கும் - அனந்தமான புண்ணியத்தை யடைகிறான்.

7 வாக்கியங்கள்.

தவுளியிலும் ஜௌகடத்திலும் இச் சாஸனமும் பின்வரும் 12, 13-ம் சாஸனங்களும் கிடையா; ஆனால் ஒன்பதாம் சாஸனத்தினிறுதியில் 108-ம் பக்கத்தில் B என்ற பாராவிலுள்ள வாக்கியங்கள் ஆங்கு இச் சாஸனத்தின் கருத்தை ஒலிக்கச் செய்கின்றன.