பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினான்காம் சாஸனம்

119

14. முடிவுரை.

தர்மத்தைப்பற்றிய இந்த லிகிதங்கள், தேவர்களுக்குப் பிரியனான பிரியதரிசி அரசனால் சில இடங்களில் சுருக்கமாயும் சில இடங்களில் (சுருக்கமும் பெருக்கமு மில்லாமல்) நடுத்தரமாயும் சில இடங்களில் விரிவாயும் வரையப்பட்டன. எல்லா விஷயங்களும் ஓரிடத்தில் திரட்டிச் சேர்க்கப்படவுமில்லை. இந்த இராஜ்யம் மிகவும் விரிந்துள்ளது ; எழுதப்பட்ட லிகிதங்கள் பல ; எழுதவேண்டுவனவும் பல. அவற்றின் மாதுரியத்தால் சில வாக்கியங்களை அடிக்கடி திரும்பத்திரும்பக் கூறியிருக்கிறோம். ஏனென்றால், இவற்றிற் கூறியபடி ஜனங்கள் ஒழுகவேண்டுமென்றே. ஆங்காங்கு எழுத்து சிதைந்திருத்தலாலோ அரை குறையாயிருப்பதாலோ வெட்டினவனுடைய தவறுதலாலோ லிகிதம் சரியில்லாமலிருக்கலாம்.

6 வாக்கியங்கள்.

நமக்குக் கிடைத்துள்ள அசோக லிகிதங்களில் எழுத்துப் பிழை, லிகிதம் அரைகுறையாக விடப்படுதல் முதலிய குற்றங்கள் இல்லையென்றே கூறலாம். ஷாபாஸ்கர்ஹியிலுள்ள ஆறாம் சாஸனத்தில் ஒரு வாக்கியம் இரண்டு முறை எழுதப்பட்டிருத்தல் எழுதினவனுடைய குற்றமென்றே சொல்லவேண்டி யிருக்கிறது.