50
திருக்குறள்
20. பயனில சொல்லாமை
1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
அறிவுடையார் பலரும் கேட்டு வெறுக்கும்படி பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன் எல்லாராலும் வெறுக்கப்படுவான்.
பயனில சொல்லுதல்-கேட்டார்க்கும், தனக்கும் நல்ல பயனைத் தராத சொற்களைச் சொல்லுதல். 191
2.பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
பயனில்லாத சொற்களை அறிவிற் சிறந்த பெரியோர்கள் முன்பு சொல்லுதல், விரும்பத்தகாத செயல்களைத் தன் நண்பர்களிடத்தில் செய்தலைவிடத் தீமையுடையதாகும். 192
3.நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பயன் சிறிதும் இல்லாதவைகளைக் குறித்து ஒருவன் விரிவாக உரைத்துக் கொண்டிருப்பானாயின், அவன் விரும்பத் தகாதவன் என்பதை அவ்வுரையே தெரிவித்து விடும். 193
4.நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பயனற்றதும், நல்ல தன்மையற்றதும் ஆகிய சொற்களை ஒருவன் பலரிடமும் சொல்லுவானானால், அவன் சொற்கள் சிறப்பில்லாதனவாய் அவனை நன்மையிலிருந்து நீக்கி விடும்.
நயன்-சிறப்பு, அறநெறியுமாம்; பண்பில் சொல்-நல்ல தன்மையில்லாத சொற்கள். 194
5.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.