பக்கம்:பிள்ளைக்கலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6建 ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி... கிர்னு தலை சுத்துது...' என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டிப் ஒட்டிப் பிரிந்தன. 'களு ஒண்னு கண்டேன்.” என்ன களு புள்ளே ?” முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள். 'களுவிலே ஒரு பூச்சி. கறுப்பா... சின்னதா... அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று. “2-ob” 'சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்... அந்தக் கறுப்புப் பூச்சி நவுத்து நவுந்து வந்து எங்கையிமேலே ஏறிச்சி... ஏறியவுடனே அது மஞ்சளா மாறிறிச்சி-ஊஹாம், மஞ்ச நெற மில்லே... தங்கநெறம்.... அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சிது... அது எங்கையிலே வந்து குந்திக்கிட்டு.. என்னெத் தின்னிடு என்னெத் தின்னிடுன்னு சொல்லிச்சி.' 3' x 'உம் அப்புறம் ?. . . 'தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சுது. எனக்கு என்னமோ புத்திக் கொளம்பிப் போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி... சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து, 'தின்னுடு தின்னுடு'ன்னு சொல்லுது பாத்தியா?.... நாம்ப திங்க மாட்டோம்கிற தைரியம் தானென்னு நெனச்சி..." - -அவள் முகம் சிவந்தது, சுழித்தது: 'ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு 'கசமுசன்னு மென்னு... வ்வோ ஒ!...' - அவள் சொல்லி முடிக்கவில்லை. குடலே முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது. தலே கனத்தது. மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க, سیاسی rrنه G یکی ؟ "மச்சான்... மச்சான். அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது. மச்சான்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/59&oldid=1395675" இலிருந்து மீள்விக்கப்பட்டது