பக்கம்:பிள்ளைக்கலி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩母莎

  1. * *

'ஆமாம்மா......! 'அது சரிப்பா, பகலில் அந்தப் பூச்சிங்க எங்கே இருக்கும் ?” 'எங்கே வேணுமானுலும் பறந்து சுற்றிக் கொண்டிருக்கும். பகலில் சூரிய வெளிச்சம் அதிகம் இருப்பதால், அந்தப் பூச்சிகளின் வெளிச்சம் நமக்குத் தெரியாது. இரவில்தான் நன்முகப் பளிச் சென்று தெரியும் இன்றைக்கு அமாவாசை இருட்டாக இருந்த தால் அதிக இருளில் அந்தப் பூச்சிகளின் வெளிச்சம் நன்ருகத் தெரிந்தது!' 'அமாவாசைன்னு என்னப்பா ?’’ ...... ιδ...... நிலவு வராத நாளே அமாவாசைன்னு சொல்வாங்க. ' 'அது போவட்டும். இருட்டு எப்படி வருது ?’’ 'சூரியன் சாயங்காலம் மேற்குப் பக்கம் போய் மறைஞ் சுடருன் இல்லையா ? அதேைல இருட்டு வருது.' 'வெளிச்சம் இல்லாம போன இருட்டா இருக்கும். இது தெரியாதா எனக்கு ? அது இல்லேப்பா... சூரியன் காலையிலே கிழக்குப் பக்கம் வருது. ஆளு அது அங்கேயே இருக்காம மேற்குப் பக்கம் போய் மறையுதே, அது ஏன் ?... 'ஒ......அதுவா......பூமி சூரியனேச்சுற்றுது...... ஆகவே...... s' r 'போப்பா! நீ பொய் சொல்றே. பூமி எப்படிச் சூரியன: போய்ச் சுற்றும். சூரியன்தான் தூரத்தில் இருக்கே." - 'இல்லை, கண்ணகி பூமி உருண்டையா இருக்கிறதாலே..." பூமி ஒண்னும் உருண்டையாய் இல்லை. தட்டையாகத் தான் இருக்கு. தட்டையாக இல்லாம உருண்டையாக இருந்தா, வீடெல்லாம் விழுந்துடாம அப்படியே எப்படி யிருக்கும் ?” 'அடடே...... நான் சொல்றதைக் கேளேன்!” 'நான் கேக்க மாட்டேன். இருட்டு எப்படிப்பா வருதுன்னு கேட்டா நீ என்னென்னவோ பொய்யெல்லாம் சொல்றே. எனக்குப் புரியாததையெல்லாம் சொல்றே...... என்று தன் தந்தையிடம் பிணங்கிக் கொண்டு தாயின் அறை நோக்கி எழுந்து சென்ருள் கண்ணகி. - 'கண்ணகி சொல்வது உண்மைதான ? அவளுக்குப் புரியும் படி இந்த சர்வசாதாரணமான விஷயத்தை எளிமையாக விளக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/158&oldid=1395777" இலிருந்து மீள்விக்கப்பட்டது