பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


அவ்வாறே செய்கிறது. அவைகள் கண்களையும் மூடிக்கொள்ளு கின்றன. மற்ற மீன்கள், குளத்தினடியில்போவதில்லை. ஆனால், நீரிலே, தொங்கவிட்டாற்போல அசைவற்றிருக்கிறது. கவலை (Sardines) இன்னும் அதற்கு இனமான அனேக மீன்கள் நித்தி ரைபோவதேயில்லை. இந்த மீன்களை குளத்தில் உயிரோடுவைத் திருப்பது கஷ்டம். ஏனென்றால் இருட்டின பின்னும் அவைகள் நீந்திக்கொண்டிருப்பதால், சுவரில் மோதிக்கொண்டு காயமடைகின் றன. ஆகையால், அநேகமாய் அவைகளெல்லாம், சிலநாட்களில் அல்லது சில மணிநேரங்களில் இறந்துவிடுகின்றன. இராத்திரி யெல்லாம் எரியும்படி ஒரு விளக்கு வைத்திருந்தால் மட்டுந்தான் அவைகள் காயமடையாமலிருக்கும்.

இந்திய பாறைக் காட்மீன் அல்லது கலவா X 1/6


கர்வா அல்லது விளமீன் X 1/6 செரானிட் கலவாய் (Serranid sea-perehes) மீன்கள் தான் அதிக ஜாஸ் தியாயும் சாப்பாட்டுக்கு மேன்மையாயுமிருக்குமீன்கள்