பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

திருவும் புகழும் சிறந்தன பிறவும்
மருவுற நிற்குமென் மாசிலா மனைவியே!
உன்னது வரவுமென் உயிரினும் இனியநம்
நன்மகார் வரவுமிவண் நல்வர வாகுக.
என்னரும் உயிரினும் என்னுயர் உளத்தினும்
மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்;
பின்னுள பாதியைப் பெரியநம் தேயத்தின்
தன்னடிக் களித்தேன்: சத்தியம் இஃதே.
பிறமகள் எவளையும் பிறதொழில் எதனையும்
உறுவனோ இனியுமென் றுன்னிடேல் அஞ்சிடேல்; ய
இற்பிரிந் திங்கியான் இயற்றும் தவத்தினில்
நிற்பனோ நீடென்று நெஞ்சொடு நினைந்திடேல்;
பெருந்தவ முனிவரும் பின்னிடத் தக்கஎன்
அருந்தவம் இந்நாள் அநேகமா முடிந்தது;
விரைவினில் வெளிவந்து வேண்டுவ செய்துயான்
தரையினில் நின்றறந் தகவொடு நாட்டுவேன்.
தனித்தநும் தவத்தினில் சார்ந்தவோ பலது பர்
கனித்ததும் உடல்மிகக் களைத்ததோ என்பையேல்,
துயரென்பதறிந்திலேன் சுகமொன்றே துய்த்துளேன்
உயருருப் பெற்றுளேன் உரைப்பேன் கேண்மோ: உய
தவத்தினைப் புரிகையில் சரீரம் களைத்திடா
துவப்புறச் செய்தலின் உவமைவே றில்லாச்
சிறியவிரு சட்டைகள் தேகத்தில் புனைந்துவேன்;
சிறியவோர் குல்லாச் சிரத்தினில் தரித்துளேன்;
வெற்றியே தவத்தினும் வேறுள் எஃதினும்

12